
இனி நமக்கு நாமே பாதுகாப்புத் தேவை
இன்று கோடிச் செல்வம் தேடினாலும் இந்த உடலை விட்டு உயிர் போகத்தான் செய்யும். இதிலே எந்த உணர்வை அதிகமாகச்
சேர்க்கின்றோமோ அந்த உணர்வுடன் தான் வெளியே செல்லும்.
விஷத்தன்மைகள் நாட்டிலே பரவப்படும் பொழுது பல மாற்றங்கள் ஆகும்.
ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்பே சொல்லி உள்ளேன். அணுகுண்டு ஹைட்ரஜன் குண்டு
இதையெல்லாம் செய்கிறார்கள்.
1.அதில் வெளிப்பட்ட கசிவுகளை எல்லாம் சூரியன் காந்த சக்தி கவர்ந்து வைத்துக்
கொள்கின்றது. இந்த அலைகள் பரவிக்கொண்டே இருக்கும்.
2.எதிர்நிலையான அலைகள் வரப்படும் பொழுது அது சூறாவளியாக
மாறும்.
சனிக்கோள் என்ன செய்கின்றது…? ஆவியின் தன்மையைத் தனக்குள் கவர்ந்து நீர் என்ற நிலையில் வருகிறது.
நீர் வரும் பக்கம் எல்லாம் சுழற்சியால் அதைக் கவர்ந்து மேலே கொண்டு
செல்கின்றது… மேகங்களாக மாற்றுகின்றது.
அதிலே சிக்கிய கரு முட்டைகள் நிலத்திற்கு வருகின்றது. இது
சனிக்கோளின் வேலை.
அதே சமயத்தில் நம் பூமியில் வேப்ப மரத்திலிருந்து வரக்கூடிய கசப்பான மணத்தைக்
கண்டபின் ரோஜாப் பூவின் நறுமணம் ஏற்றுக் கொள்வதில்லை. அந்த அலைகள் இதைக் கண்டு அஞ்சி
ஓடுகின்றது.
1.அது ஓடும் பாதையிலே விஷச் செடியினுடைய மணத்திலே மோதினால் அழுத்தம்
தாங்காது உடனே சுழற்சியாகின்றது.
2.சிறு சிறு சுழல் காற்றுகளை பார்க்கலாம்.
இந்த விஷத்தன்மையினால் சுழிவாக ஏற்படக்கூடிய அந்த இடத்திலே ஒரு கர்ப்பிணி நின்றிருந்தால்
அந்த உணர்வைச் சுவாசித்து கருவிலிருக்கக்கூடிய குழந்தைக்கு இணைந்தால் “மூளை வளர்ச்சி அற்று சிந்தனையில்லாது
போகும்… சிந்தனை இருக்காது…” செவிகள்
கேட்காது… ஊமையாகவும் மாறும்.
குடும்பத்தில் எல்லோரும் நன்றாக இருப்பார்கள்… ஆனால் எனக்கு ஏன் ஊமைக் குழந்தை பிறந்தது…? என்று கேட்கலாம்.
ஒரு பொருளுடன் ஒரு பொருள் இணையப்படும் பொழுது விஷத்தன்மையான உணர்வின் சுழற்சி நம்
வட்டத்திலே கண்டால் அந்தக் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கு ஒன்றிலிருந்து 90 நாட்களுக்குள் மூளை வளர்ச்சி
குறைகின்றது.
குருநாதர் இதையெல்லாம் எமக்குத் தெளிவாகக் காட்டினார்.
நாம் தவறு செய்தோமா இல்லை…! இதைப்போல இது எப்படி சுழற்சி ஆகின்றதோ அதைப் போல் தான் விஞ்ஞானத்தில்
செயற்கையாக உருவாக்கப்பட்ட நிலைகளும் சுழன்று வரும்.
ஹைட்ரஜன் குண்டோ அணுகுண்டோ
அதனுடைய கழிவுகளோ அதையெல்லாம் சூரியன் எடுத்து அலைகளாகப் பரப்பி வைத்திருக்கின்றது.
1.அதிலே
இந்த அழுத்தங்கள் வரப்படும் பொழுது விஷத்தன்மைகள் அதிகமாக
இருக்கப்படும் பொழுது
2.ஒன்றோடு ஒன்று மோதும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் அந்த இடத்திலே “சூறாவளி” ஏற்படும்.
எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலைகளில் கம்ப்யூட்டர்களை வைத்து இதை எல்லாம்
கண்டுபிடிக்கின்றார்கள். எதிலிருந்து
வந்தது என்று அவர்களுக்குத் தெரியாது.
அழுத்தங்கள் ஏற்பட்டு மோதலால் ஏற்படும் சந்தர்ப்பங்களினால் காற்றின் சுழற்சி (TORNADO) வேகம் இவ்வாறு இருக்கும்
என்று கம்ப்யூட்டரில் எலக்ட்ரானிக் மூலமாக அறிவிப்பு கொடுக்கின்றார்கள்.
அமெரிக்காவில் இந்த நகரத்தின் பக்கம் இது போன்று வரும் என்று அனுமானம் செய்து எச்சரிக்கை
செய்து மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு வெளியேற்றுகின்றார்கள்.
சேட்டிலைட் மூலமாக இந்த ஒளிக் கதிர்களின் உணர்வுகளை ஈர்த்து “எதிலே மோதுகின்றது…?” என்பதைக் கண்டுணர்கின்றார்கள். புயல் எதிலே வருகிறது
என்றும் பார்க்கின்றார்கள்.
1.ஆனால் கடலில் உருவாகும் புயல் வேறு
2.இங்கே நகரத்திற்குள் ஏற்படும் சூறாவளி வேறு.
விஷத்தின் தன்மைகள் ஒன்றுடன் ஒன்று மோதப்படும் பொழுது அப்படியே மோதி அலேக்காகக்
கட்டிடங்களைத் தூக்கிச் செல்கின்றது. மூன்று மாடிக் கட்டிடமாக இருந்தாலும் தூக்கி எறிகின்றது.
இதை எத்தனையோ வருடங்களுக்கு முன்பே யாம் சொன்னோம். ஆனால் யாம் சொன்னால் யார் ஏற்பார்கள்…? சொன்னாலும் எதையோ ஒட்ட வைத்து இணைத்துச் சொல்கிறார் என்று புதிதாகத் தான்
பார்ப்பார்கள்.
ஆனால் என்னுடைய உபதேசங்களை முன்னாடி கேட்டவர்களுக்கு இது புரியும். இது இப்படித்தான் வரும்… அது எந்தப் பக்கம் மோதுகின்றதோ அதனுடைய செயலாக்கங்கள் இப்படித்தான்
இருக்கும்…! என்று பல முறை எடுத்துக் கூறியுள்ளோம்.
ஒரு சமயம் டெல்லியிலிருந்து பத்ரிநாத்துக்குச் செல்வதற்காக ரோட்டிலே நடந்து
சென்று கொண்டிருக்கின்றேன். அங்கே ஒரு
சூறாவளி வருகின்றது. எனக்கு முன்னாடி கார் பஸ் லாரி எல்லாம்
சென்று கொண்டிருக்கின்றது.
வந்த வேகத்தில் “டப்…”
என்று திசை திரும்பி பஸ் லாரி கார் அவைகளைத் தூக்கி எறிந்தது. பஸ்சைப் பக்கத்தில் இருந்த காம்பவுண்டுக்குள் மாடியில் தூக்கி எறிந்தது…
அது தலைகீழாக நிற்கின்றது. உள்ளே இருப்பவர்கள்
தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
லாரியிலிருந்து மூட்டைகள் சரிந்து உள்ளே இருந்தவர்கள் இறந்து விட்டார்கள். இரண்டு வினாடிகளுக்குள் நடந்த
நிகழ்ச்சி இது. சித்தான பிற்பாடு நான் பார்த்தது இது.
ஆனால் சித்தாவதற்கு முன்னாடி அகமதாபாத்தில் நான் இருக்கும் பொழுது இது போன்று
ஒரு நிகழ்ச்சி நடந்தது. இந்தச்
சூறாவளி எப்படி உருவாகிறது…? என்று சொன்னால் விஷத்தன்மை
கொண்ட கெமிக்கல்களை தொழிற்சாலைகளில் இருந்து வடிகட்டுகின்றார்கள்.
1.மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் அறிவுறுத்தலின்படி விஷத்தை வடிகட்ட வேண்டும்
என்று இவர்கள் செய்கின்றார்கள்.
2.இப்படி இதையெல்லாம் வடிகட்டினாலும் தண்ணீரில் கலக்கின்றது.
3.நீரெல்லாம் காய்ந்த பின் அதில் இருக்கக்கூடிய மணங்களைச் சூரியனின் காந்த
சக்தி கவர்ந்து வைத்துக் கொள்கின்றது.
4.மீதிக் கழிவுகள் களிமண் போன்று படித்திருக்கின்றது… அதிலிருக்கக்கூடிய
விஷத்தின் ஆற்றலையும் சூரியனுடைய காந்த சக்தி எடுக்கின்றது.
ஏனென்றால் இது எல்லாம் குருநாதர் எமக்குக் காட்டிய நிலைகள்.
1.இது போன்ற தொழிற்சாலைகள் எங்கெல்லாம் வைத்திருக்கிறார்களோ அது பரவலாகப்
பரவிச் செல்லும் பொழுது
2.சந்தர்ப்பத்தில் இந்த அலைகள் ஒன்றுக்கொன்று எதிர்மறையாக மோதப்படும் பொழுது
சூறாவளியாக மாறுகின்றது.
மணி சாயங்காலம் 4 மணி
இருக்கும். அந்த நேரத்தில் நான் ஒரு தையல் கடையிலே
உட்கார்ந்து இருந்தேன். தற்செயலாக நான் பார்க்கின்றேன்… துணிமணிகள்… எத்தனையோ பொருள்கள்… தகரம்… எல்லாம் மேலே போய்க் கொண்டிருக்கின்றது.
நூறு ரூபாய் நோட்டுகள் கூட பறந்து வந்து கொண்டிருந்தது.
பக்கத்திலேயே சூறாவளி வந்துவிட்டது.
அங்கே கட்டிலிலே ஒருவர் படுத்திருந்தார். அந்தச் சூறாவளி கட்டிலுடன் சேர்த்து அலேக்காக பனை மர உயரத்திற்குத்
தூக்கிப் பறந்து செல்கின்றது அவர் அலறிக் கொண்டிருக்கின்றார். ஆனால் கட்டிலை இறுக்கிப் பிடித்துக் கொண்டார். இதை
மற்றவர்கள் கவனிக்கவில்லை ரூபாய் நோட்டை எடுக்க வேண்டும் என்று அலைந்து
கொண்டிருக்கின்றார்கள்.
நானும் ஒரு 200 ரூபாய்
பணம் எடுத்தேன். அந்த நேரத்தில் என்னிடம் காசு இல்லை…
இது நடந்த நிகழ்ச்சி. ஒரு நாயை அப்படியே
தூக்கிச் சுழற்றுகின்றது அது வள் வள் என்று கத்திக் கொண்டிருக்கின்றது.
வீடுகளில் சில இடங்களில் மேலே ஒட்டுத் தகரங்களைப் போட்டு வைத்திருந்தார்கள். அதை எல்லாம் பிய்த்துத் தூக்கிக்
கொண்டு மேலே செல்கின்றது. பார்த்தால் அடுத்து இங்கே
வீட்டிற்கு மேல் ஒன்றையும் காணோம். உள்ளே இருக்கக்கூடிய
சாமான்களை எல்லாம் தூக்கிக் கொண்டு செல்கின்றது.
இதை எல்லாம் கண்ட பின் ஒவ்வொருவரும் அரண்டு வீட்டிற்குள் சென்று ஒடுங்கத்
தொடங்கினார்கள். தகரம் பறந்து
வருகின்றது அல்லவா… வெட்டிவிடும் என்று சொல்லி வீட்டிற்குள்
சென்றார்கள். நானும் வீட்டிற்குள் வந்து விட்டேன்.
இது எல்லாம் எதிர்நிலையான உணர்வின் இயக்கங்கள். நடந்த இந்த நிகழ்ச்சியைப் பற்றிக் குருநாதர்
என்னிடம் பின்னாடி சொல்கின்றார். கண்ட அனுபவங்களைத் தான் உங்களிடம் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.
காற்றிலே இருக்கக்கூடிய நிலைகள் ஒரு செடியில் இருக்கக்கூடிய மணம் மற்ற மணங்களோடு
கலந்து புது விதமாகத் தாவரங்கள் மாறுகின்றது அல்லவா. இது இயற்கை.
ஆனால் விஞ்ஞான அறிவு கொண்டு தாவர இனங்களின் வித்தின் அணு செல்களை மாற்றிப் புது
விதமான செடிகளைக் கொண்டு வருகின்றார்கள். உயிரினங்களிலும்
அதனுடைய அணுக்கருக்களை எடுத்துக் கருப்பைக்கு வெளியிலே வைத்துப் புது உயிரினங்களாக உருவாக்கிக் கொண்டு வருகின்றார்கள். விஞ்ஞானம் இன்று இவ்வளவு முன்னேறி இருக்கின்றது.
ஆக இத்தனை
இருந்தாலும்
1.நாம் எங்கே செல்ல வேண்டும்…?
2.எங்கே போகின்றோம்…? எங்கே போக வேண்டும்…? என்று சிந்தனை செய்யுங்கள்.
இன்னும் தலைவலி போகவில்லை மேல் வலி போகவில்லை என்று தான் என்னிடம் கேட்டுக் கொண்டு
வருகின்றார்கள். “என்னுடைய வலி… வேதனை… போக
வேண்டும் அதற்கு அருள் சக்தி வேண்டும்…” என்று கேளுங்கள்
என்று சொன்னால் அதைக் கேட்பதற்கு யாரும் இல்லை.
காரணம்…
1.உங்களுக்கெல்லாம் முழு சக்தி கொடுத்திருக்கின்றேன் அல்லவா.
2.நமக்கு நாமே பாதுகாப்புத் தேவை…! துருவ நட்சத்திரத்தின் சக்தியைத் தான்
எடுக்கப் பழக வேண்டும்.
3.சாமி காப்பாற்றுவார் சாமியார் காப்பாற்றுவார் என்பதை எல்லாம் முதலில் விடுத்துப்
பழகுதல் வேண்டும்.