ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 3, 2025

மனிதனே மனிதனுக்குள் சென்று நோய்வாய்ப் படச் செய்து வீழ்த்தி… மனிதரல்லாத உருவைத் தான் பெறுகிறது

மனிதனே மனிதனுக்குள் சென்று நோய்வாய்ப் படச் செய்து வீழ்த்தி… மனிதரல்லாத உருவைத் தான் பெறுகிறது


ஒருவருக்கு சர்க்கரைச் சத்து அதிகமாக இருக்கும் இரத்தக் கொதிப்பு அதிகமாக இருக்கும் ஆஸ்மா நோயிருக்கும் டி.பி. நோய் இருக்கும்.
 
1.ஆஸ்மா நோய் உள்ளவர்கள் இரத்தக் கொதிப்பிற்குண்டான மருந்துகளைச் சாப்பிட்டால் அது ஆஸ்மா நோய்க்கு ஒத்துக் கொள்ளாது.
2.அதே சமயத்தில் ஆஸ்மாவிற்குண்டான மருந்தை உட்கொண்டால் இரத்தக் கொதிப்பிற்கு அது ஒத்துக் கொள்ளாது.
3.ஆனால் சர்க்கரைச் சத்துக்குரிய மருந்தைச் சாப்பிட்டால் இந்த மூன்றுக்கும் ஒத்துக் கொள்ளாது.
 
தனித்தனித் தன்மையாகி நம் உடலுக்குள் பல விதமான போர் முறைகளை ஆரம்பித்து எத்தகைய மருந்திற்கும் அது கட்டுப்படாது நிலை ஆகிறது.
 
ஆக மூன்றுக்கும் ஒரு விதமான மருந்தை உட்கொள்ளும் பொழுது
1.அந்த விஷம் கலந்த மருந்தினைச் சாப்பிடும் பொழுது
2.கிட்னி விஷத்தைப் பிரிக்கும் தன்மை இழந்து விட்டால் உப்புச் சத்தாக மாற்றி விடுகின்றது.
 
உப்புச் சத்தும் சர்க்கரைச் சத்தும் சர்க்கரை நோயும் இரத்தக் கொதிப்பும் இதைப் போன்ற பல நிலைகள் வரப்படும் பொழுது மனித உறுப்புகள் சீராக இயங்காது மனித உறுப்புகள் அனைத்தும் செயல் இழந்து விடுகின்றது.
 
அந்த உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் பழுதடையும் பொழுது அதில் விளைந்திடும் அணுக்கள் தான் கடைசியில் நமக்குள் வருகின்றது.
1.இந்த உடலில் நல்ல அணுக்கள் வளர முடியாத தன்மையும் வரும் பொழுது
2.உயிர் இந்த உடலை விட்டு வெளியே செல்கின்றது.
 
வெளி செல்லும் பொழுது கடைசி நிமிடம் எதனை இந்த உடலில் வளர்த்துக் கொண்டதோ அந்த அணுத்தன்மையாக அது உயிரான்மாவில் பெருகி விடுகின்றது.
 
பல விதமான பயிர்களை விவசாயம் செய்கின்றோம். அதிலே எந்தெந்தப் பொருள்களை இணைத்து அந்த வித்து விளைகின்றதோ அடுத்த செடி விளையும் பொழுது அதே போல விளைகின்றது.
 
விஞ்ஞான அறிவு கொண்டு பல விதமான கலவைகளைச் சேர்த்து ஒரு கருவுக்குள் மாற்றி அமைத்து அப்படிப்பட்ட வித்தினை உருவாக்கி விட்டால் அது வளர்ந்த பின் அதன் இனத்தைப் பெருக்குகின்றது.
 
மாடு ஆடோ நாயோ மனிதனோ எலியோ இதைப் போன்ற நிலைகளை எல்லாம் மனிதன் இன்று புதிது புதிதாக மாற்றி அமைக்கின்றான்.
 
இந்த ஒரு உடலுக்குள் வந்த பின்
1.எப்படி இன்னொரு உடலுக்குள் அணுக்கருக்களைச் சேர்த்து அதைக் கருவாக விஞ்ஞானத்தில் உருவாக்குகின்றானோ
2.இதே போல நாம் இந்த உடலை விட்டு வந்தபின் யாருடன் நாம் பிரியமாகப் பழகி இருந்தோமோ
3.அந்த வலு ஈர்க்கப்பட்டால் அந்த உடலுக்குள் இந்த ஆன்மா புகுந்து விடுகின்றது.
4.புகுந்த பின் இந்த உடலில் எதனை உருவாக்கியதோ அதே போல அணுக்களை அங்கே மாற்றம் அடையச் செய்து
5.அந்த உடலில் உள்ள அணுக்களும் அந்த உயிருக்கு அது மாற்றம் அடையச் செய்து விடுகின்றது
 
ஆனால் இதைப் போல இந்த உடலில் எத்தனை துயரங்கள் பட்டதோ எத்தனை வேதனைகள் பட்டதோ எத்தனை சங்கடப்பட்டதோ எத்தனை சலிப்புப் பட்டதோ குடும்பத்தில் எத்தனை விரக்தி அடைந்ததோ
1.ஆக அன்பும் பாசமும் கொண்டு நாம் இப்படி வாழ்ந்தோம் பிறருக்கு உதவி செய்தோம் என்று எண்ணினாலும்
2.அந்த வேதனையின் நிலையே முன் வந்து வேதனை அதிகரித்து அதிகரித்த நிலையில்
3.அடுந்த உடலுக்குள் சென்ற பின் அந்த உடலில் இதே நிலையாகி அதில் அந்தக் கருவாக உருவாக்கப்பட்டு
4.இந்த உயிர் மனிதனல்லாத உருவினை உருவாக்கும் அணுக்களைப் பெருக்கிவிட்டு
5.அந்த உடலையும் வீழ்த்திவிட்டு வெளிவந்த பின் மனிதனல்லாத உருவை உருவாக்கி விடுகின்றது.
 
இந்த உயிரின் வேலை அது தான்.
 
எந்த உடலில் உருப்பெற்றதோ அந்த உடலிலும் அந்த வேதனை என்ற நஞ்சு வளர்ச்சியாகி அவர்கள் பண்பு பரிவு கொண்ட நிலையில் அவர்களை யார் நுகர்தறிந்தாலும் அவர் உடலுக்குள் சென்று இப்படித்தான் மனிதனே மனிதனுக்குள் சென்று மனிதனை நோய்வாய்ப் படச் செய்து வீழ்த்தி மனிதரல்லாத உடல்களைத் தான் பெறுகின்றது.
 
ஆகவே… துயர்படும் உணர்வுகளைக் கண்டுணர்ந்தாலும் அதிலிருந்து விடுபட நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் காலை துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வினை உபதேசித்து
1.செவி வழி கேட்டுணர்ந்து உணரச் செய்து
2.உங்கள் உயிரில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வின் கருக்களை ஈஸ்வர லோகத்தில் உருவாக்கச் செய்கின்றோம்.
 
அந்த உணர்வு உங்கள் இரத்த நாளங்களில் கருக்களாக உருவாக்கச் செய்து உங்கள் உடலுக்குள் வளர்ச்சி அடையப்படும் பொழுது உங்களுக்குள் இதற்கு முன் தீமை என்ற உடலை வளர்த்த நிலைகளுக்கும் நஞ்சு கொண்ட உணர்வுகளுக்கும் எதிர்ப்பாகும் பொழுது
1.நாம் நல்ல குணம் கொண்டு தீமைகளை உருவாக்கப்படும் பொழுது நமக்குள் துயர் என்ற நிலைகள் எப்படி வருகின்றதோ
2.துயர் என்ற நிலைகள் வரப்படும் பொழுது இதிலிருந்து விடுபட்ட அருள் ஞானிகளுடைய உணர்வை நாம் நுகர்ந்தறியப்படும் பொழுது
3.தீமையை உருவாக்கும் அணுக்களை அது மடியச் செய்து விடுகின்றது.
4.தீமைகள் நமக்குள் வந்தாலும் மடிந்திடும் உணர்வுகள் தனக்குள் அது ஒளியாகி உயிரோடு ஒன்றி ஒளியின் சுடராகப் பெருகுகின்றது.
 
பன்றி நாற்றத்தைப் பிளந்து நல்ல உணர்வுகளை நுகர்ந்து மனிதனாக அடுத்து எவ்வாறு சரீரம் பெற்றதோ இதைப் போல
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் அதிகமாக அதிகமாக
2.தீமைகளை வென்றிடும் உணர்வுகள் வளர வளர
3.இந்த உடலை விட்டு நாம் சென்றால்
4.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலத்துடன் நாம் இணைய நேரும் (இவ்வழியில் செல்வோர்…!)