
நல்லவர் கெட்டவராக மாறுவதற்குக் காரணம் என்ன…?
மனிதனின் வாழ்க்கையில் நல்லவர் கெட்டவராவதும் கெட்டவர் நல்லவராவதும் “சந்தர்ப்பங்களில் தான்…” கெட்டவர் நல்லவர் என்றாலும்…
1.”அந்தக் கெட்டவர்” நல்லவரின் நல்ல போதனைகளைக்
கேட்கப்படும் பொழுது கெட்டதின் பலனைச் சிந்திக்கின்றார்.
2.நாம் கெடுதல் செய்தோம் நாம் அதிலிருந்து இப்பொழுது மகிழ்ச்சி என்ற நிலைகள்
வரப்படும் பொழுது சிந்திக்கத் தொடங்குகின்றார்.
3.நல்லவரின் உபதேசத்தை ஏற்றுக் கொண்ட பின் தன்னை
அறிந்து எப்படிப் பக்குவமாக நடந்து கொள்வது…? என்று அவருக்குள் சிந்தனை தோன்றுகின்றது.
4.சிந்தனை தோன்றும்போது அதன் வழி தனக்குள்
தீமையிலிருந்து விடுபடும் உணர்வுகளும் (தீமையால் பட்ட அனுபவத்தால்)
5.பிறருக்குத் தீமை செய்து அவர்கள் தொல்லைப்பட்ட உணர்வுகள் நுகர்தறிந்ததால்
ஞானங்களும் அங்கே அவருக்கு வருகின்றது.
இதைப் போன்று அவன் வாழ்க்கையில் நல்லவன் செயலை அதிகமாகக் கூர்மையாகக்
கவனித்தால் அந்த உணர்வின் வளர்ச்சியாகி தன் வாழ்க்கையில் வியாபாரத்தை எப்படிப்
பெருக்க வேண்டும்…? உயர்ந்த
ஞானங்களை எப்படிப் பெருக்க வேண்டும்…? என்ற உணர்வுகள் அங்கே
விளைகின்றது. “அவன் வாழ்க்கையிலே செல்வந்தன் ஆகின்றான்…”
அதே சமயத்தில் நல்லதைச் செய்து அதனால் எதிர்பார்த்த நிலைகள் வரும் பொழுது
இரக்கம் ஈகை கொண்ட உணர்வுகளை நுகர்ந்து… நல்லவர் பிறர்படும் கஷ்டத்தினை நுகர்ந்து விட்டால்… அந்த உணர்வுகள் அவருக்குள் வலிமை பெற்ற பின் “பதட்டமும்
பயமும்” வந்து விடுகின்றது.
ஏனென்றால் பிறிதொரு உணர்வின் தன்மை அச்சுறுத்தும் உணர்வுகளை இவர் பார்த்தாலும்
1.பரிவு மனம் கொண்டு இதனை நுகரப்படும் பொழுது
2.தன் உடலில் உள்ள நல்ல குணங்களில் இது பட்டபின் உணர்வுகள் எதிர்நிலையாகின்றது.
எவ்வாறு…?
நாம் நுகரும் உணர்வுகள் நம் உடலில் உள்ள நிலையும் அந்த அணுக்கள் இணைந்து “புது விதமான அணுக்களாக மாறுகின்றது…” அவ்வாறு உருமாறி விட்டால் அதனால் அடிக்கடி பயப்படுவதும்… சிந்திக்கும் திறன் இழப்பதும்… கவனக் குறைவுகள்
ஆவதும்… பயத்தின் உணர்வு கொண்டு தன் வாழ்க்கையைச் சீராகப்
பயன்படுத்த முடியாத நிலைகள் ஏற்படுகின்றது.
ஆகவே வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகளால்
1.நல்லவர் கெட்டவராவதும் சந்தர்ப்பத்தால் கடும் நோயாக ஆவதும்
2.இதைப்போல பண்பும் அன்பும் கொண்டோர் உணர்வுகள் இவ்வாறு இயங்குகின்றது.
கண் கொண்டு பிறருடைய துயர்களை உற்றுப் பார்த்துக் கேட்டறிந்த பின் “ஓ…ம் நமச்சிவாய…” என்று இந்த உடலுக்குள் அணுக்களாக
உருப்பெற்று விடுகின்றது.
இப்படி இருக்கும் இந்த நிலையில் நல்லவரை காக்க வேண்டும் அல்லவா. காரணம்… இந்த
விஞ்ஞான உலகில் அனைத்தையுமே நிரூபித்துக் காட்டுகின்றார்கள்.
மனிதன் கல்வியில் கற்றுக் கொண்ட உணர்வு கொண்டு “இதன் இதன் உணர்வுகள் இவ்வாறு இயக்கும்” என்று பதிவு செய்து கொண்டால் பதிவினை நினைவுக்குக் கொண்டு வரும் பொழுது சிக்கலை நீக்கும் தன்மை வருகின்றது… வாழ்க்கையின் சிக்கலை நீக்க உதவுகின்றது.
ஆனால் வாழ்க்கையில் சிக்கல் கொஞ்சம்
கடினமாகி விட்டால் வேதனையாகி அந்த வேதனை வளர்ந்து விட்டால்…
சிக்கலை நிவர்த்திக்கும் உணர்வுகள் வந்தாலும்
1.வேதனைப்பட்டபின் தன்னையே சிந்திக்கும் தன்மை இழந்து விடுகின்றது.
2.அப்போது சோர்வடைகின்றது… அந்தச் சோர்வடைந்த நிலையில்
ஒருவர் நல்லதைச் சொன்னால்
3.அந்த உணர்வுகள் தாங்காது கோபம் வருகின்றது…
உணர்ச்சிவசப்படுகின்றார்.
இவ்வாறு நம் உடலுக்குள் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் “ஒவ்வொரு நொடிகளிலும் உணர்வு மாறிக்
கொண்டே உள்ளது…!”
இன்றைய நிலை நாளை இல்லை…!
அதனால் தான் சிவன் ஆலயத்தில் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை என்று
தெளிவாகக் கூறுகின்றார்கள். அதே
சமயத்தில் விநாயகருக்கு முன் எலியைப் போட்டு மூஷிகவாகனா என்று காட்டுகின்றார்கள்.
1.நாம் நல்லவர்களைப் பார்த்து அந்த உணர்வை அதிகமாக நேசித்தால்
2.நமக்குள் இருக்கும் கெட்ட குணங்களை அந்த நல்லது அடக்குகின்றது. அது தான் மூஷிகவாகனா…!
சுவாசித்த உணர்வுகள் இயக்கினாலும் வேதனையும் துன்பமும் படும் உணர்வினை ஒரு
நல்லவர் பண்புள்ளவர் அந்த நல்ல சொல்லைக் கேட்டு நடந்தால் (சாதாரண நிலைகளில்) அதை நுகரப்படும் பொழுது கேட்டறியும் தன்மை வந்தால் இது பெருகுகின்றது ஓம்
நமச்சிவாய என்று…!
கெட்ட குணங்களுக்குள் அந்த நல்ல உணர்வுகளைச் சேர்க்கப்படும் பொழுது அது
குறைகின்றது. ஆகவே
1.இயற்கையின் நியதிகளை… சந்தர்ப்பத்தில் நாம் சுவாசித்தது…
2.அந்தந்த உணர்வின் இயக்கங்களாக நம்மை எப்படித் திசை மாற்றுகிறது…? என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
இதை எல்லாம் நாம் தெரிந்து தெளிந்து ஞானிகள் காட்டிய அருள் உணர்வுகளை… அந்த ஒளியான உணர்வுகளை நமக்குள்
சேமித்து… இருள் சூழச் செய்யும் நிலையிலிருந்து நாம்
விடுபடுதல் வேண்டும். நம் நல்ல குணங்களைக் காக்க வேண்டும்.
ஞானிகள் காட்டிய வழியில் அருள் வாழ்க்கை வாழ வேண்டும்.