
தீமைகள் வரும் போது சிந்தித்துச் செயல்படுகின்றோமா…?
தவறு செய்கின்றார் என்று ஒருவரை நாம் எண்ணும் பொழுது
1.அவர்களை அறியாமல் அது இயக்குகின்றது என்பதை நாம்
உணர்தல் வேண்டும்.
2.அதற்குத்தான் நாம் பார்க்கும் அனைவரையும் மதிப்போம்
3.உடலைக் கோவில் என மதிப்போம்
4.அதில் வீற்றிருக்கும் உயிரைக் கடவுள் எனத் துதிப்போம் என்ற இந்த பாடலைக்
கொடுப்பது.
ஈசனால் உருவாக்கப்பட்ட இந்த ஆலயம் உடல். அவர்களை அறியாமல் செய்ல்களைச் செயல்படுத்துகிறது
என்று சொன்னால்… சொல் வெளிப்படுகிறது
என்று சொன்னால்…
1.அந்த நேரத்திலே ஆண்டவன் வீற்றிருக்கும் ஆலயம்
பரிசுத்தமாக வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.
2.ஏனென்றால் வெளியில் இருந்து தான் தூசிகள் உள்ளே செல்கின்றது.
ராமாயணத்தில் வாலியைக்
காட்டுகின்றார்கள். குகைக்குள் அவன் இருக்கின்றான். அம்பை வயது அந்த கல்லைக் போட்டு
அவன் வெளியே வராதபடி ராமன் குகையை மூடி
விடுகின்றான். ஆனால் “அவனைக் கொல்லவில்லை…!” அவன் வீரியத்தைத் தடைப்படுத்துகின்றான்.
இதைத் தெளிவாக
எடுத்துக்காட்டுவதற்கு தான் இராமாயணத்தில் நம் எண்ணங்கள்
கொண்டு உணர்ச்சிகள் வரும் பொழுது
1.பிறர்
செய்யும் தீமைகள் நமக்குள்ளே சென்று விட்டால்
என்ன செய்யும்…?
2.அதன் உணர்வாக அது வலிமையாக இயக்க ஆரம்பித்து விடும்.
3.நல்ல குணம் நமக்குள் இருக்குமோ…? அது செயலற்றுப் போய் விடுகின்றது.
ஒருவர் கோபமாகப்
பேசுகின்றார் தவறான செயல்களைச் செய்கிறார் என்றால் நாம் நுகர்ந்த உடனே அவர் மீது வெறுப்பு வரும் அந்த உணர்வு இரண்டும் சேர்த்து
ஈஸ்வரலோகத்தில் உருவாக்கும்.
அவரைப் பார்க்கும்
போதெல்லாம் ஜாடையாகப் பேச வைக்கும்.
யோக்கியன் மாதிரி எதை எதையோ பேசுகிறான்
என்று சொல்லும்படி வரும் இவன் எல்லாம் யோக்கியனா…? என்று நம்மைப் பேச வைக்கும்.
இந்த உணர்வுகள் நமக்குள் வளர்ச்சியாகி வெறுப்பின் தன்மை உண்டாக்கிவிடும். நம்மை அறியாமலே
இந்த வெறுப்பு ஈஸ்வரலோகத்தில் உருவாகி கருவின் தன்மை பெற்று இந்திரலோகமாக நம் உடலுக்குள் பிரம்மலோகமாக அணுத்தன்மை பெற்று விடுகின்றது.
அப்படி ஆகிவிட்டால் அதே உணர்வு கொண்டு அது சாப்பாட்டுக்கு ஏங்கும். அப்பொழுது அதை மாற்றி அமைக்க
வேண்டும் அல்லவா.
அப்பொழுது நம்மை நாம் சிந்திக்க வேண்டும்… நம்மை எது கோபிக்கச் செய்கிறது…? என்று. அவர்கள் செய்த தவறு
நம் உயிரிலே பட்டு அந்த உணர்ச்சிகளைத் தான்
ஊட்டுகின்றது… சொல்லாக வெளிப்படுகின்றது.
அடுப்பிலே எந்தெந்தக் காய்கறிகளைப் போட்டு வேக வைக்கின்றோமா அந்த மணம் தான் வரும் இந்த மணத்தை நாம் மாற்றி அமைப்பதற்காக
வேண்டித் தான் உங்களுக்கு “இந்தத் தியானத்தின் மூலமாகச் சக்தியைக் கொடுப்பது…”
நம்மை அறியாமல் நடக்கும் நிகழ்ச்சிகளில்…
1.தனக்குள் எப்படி எது இயக்குகிறது…? என்று தன்னை அறிதல் வேண்டும்.
2.நாம் ஏன் கோபிக்கின்றோம்…? எதற்காகக் கோபம் வருகின்றது…? என்ற நிலையை அறிய வேண்டும்.
அந்தக் கோபத்தைத் தணிக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?
உங்களிடம் இருந்து ஒரு தவறு வருகிறது என்றால் அதை எப்படி நீக்க வேண்டும் என்ற
வகையிலே அன்பு பரிவு அதனுடன் சேர்த்து பண்புடன் அறிவுடன் நாம் வாழப்படும் பொழுது
1.உண்மையின் உணர்வை எண்ணி நல்லது செய்ய வேண்டும் என்று
எண்ணும் பொழுது
2.அதைப் பயன்படுத்தும் நேரம்
சரியில்லை என்றால் அது பகைமை உணர்வைத் தான் ஊட்டும். அதிலிருந்து நாம் தப்பிக்க வேண்டும்.
என் குடும்பத்தைப் பற்றிச் சொல்லப்படும் பொழுது சந்தர்ப்பம் அந்தப் பகைமை உணர்வு வரும் பொழுது சாப அலைகள் ஆகி அதன் தொடர்ச்சியில் என்
பெரியப்பாவின் குடும்பமே சின்னாபின்னமானது.
அதன் வழி பின் வந்த சந்ததியினர்களும் தவறு செய்யவில்லை ஆனால் அங்கேயும்
தீமைகள் விளைந்தது.
இதைப் போன்று ஒரு குறையைக் காணுகிறோம் என்றால் பிறருடைய நிலை தான் நம்மை இயக்குகின்றது என்ற நிலையை
அந்த இடத்தில் நாம் சிந்திக்க வேண்டும்.
உடனே சிந்தித்துப் பார்த்தோம் என்றால் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அவன் வீற்றிருக்கும் ஆலயம் என்று எண்ணிவிட்டால் அவர்கள் செய்யும் தவறு நமக்குள் வராது.
1.அந்த ஆலயத்தில் அவர்களுக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க
வேண்டும்.
2.அவர்களும் பொறுப்புணர்ந்து செயல்படும் சக்தி பெற வேண்டும்.
3.அந்த ஆண்டவன் வீற்றிருக்கும் ஆலயத்தில் மனத்தூய்மை
ஏற்பட வேண்டும் என்று நாம் எண்ணிப் பழகுதல் வேண்டும்.
நமக்குள் கோபமோ பழிச் சொல்லோ அப்பொழுது நமக்கு வராது.
ஆனால் அவர் சொல்லும் சொல்லை நாம் சொல்லும் பொழுது இப்படிச்
செய்கின்றீர்களே என்று பழிச் சொல்லாக
மாறும். பதிலுக்கு நீங்கள் என்ன யோக்கியமாகப் போய்விட்டது…? என்ற நிலை வந்துவிடும்.
இராமன் அம்பை தான் என்றால் கணைகளைத் திரும்பி வாங்கிக் கொள்வான். அப்பொழுது இதில் யார்
தவறு செய்தது என்றே முடிவு தெரியாது.
சந்தர்ப்பம் அந்த உணர்ச்சிகளை ஊட்டுகின்றது. இந்த உணர்வு ஊட்டப்படும் பொழுது பழிச் சொல்லாக மாறி நம்மை அதாவது இரண்டு பேருமே யார் தவறு செய்தார்கள்…? என்று இருவருக்குமே தெரியாது.
கோபப்பட்டுச்
சண்டை போட்டாலும்.. நான் ஒன்றும் சொல்லவில்லை அவன் தான் செய்தான்
என்று
1.இருவருமே ஒருவருக்கொருவரைத் தான் சொல்ல முடியும்
தவிர
2.முடிவே காண முடியாது. காண
முடியுமா…!
இதிலே நியாயம்
பேசுபவரும் “சரி போங்கள்” என்று உண்மை
எடுத்துச் சொன்னால் உடனே அவர்கள் மீதும் பகைமை வரும். இரண்டு பேரில் ஒருத்தரிடம் பகைமை வந்து தான் தீரும்.
சமாதானமாகிப் போனால் சரி
அவருக்கென்ன அவருக்கு வேண்டியவர் போலிருக்கிறது பேசி விட்டுப் போகிறார் என்று இப்படி
1.ஒரு உணர்வின் தன்மை ஒன்றிலே மாற்றப்படும் பொழுது
2.இப்படி எல்லாம் மாறுபட்ட உணர்வுகள் நல்ல குணங்களைச்
சீராக இயக்க விடாதபடி செயல்படுத்துகின்றது.
காரத்தை எதிலே கலந்தாலும் அதனுடைய ருசி கெடத்தான் செய்யும் ஆகவே நாம் வெளிப்படுத்தும் சொல்லின் நிலைகள்
பக்குவப்படுத்திடும் நிலையாகி
1.நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அருள் ஞானிகள்
உணர்வுகளை எடுத்து மாற்றி அமைத்து
2.அதன் வழியில் தெளிந்து தெரிந்து நாம் செயல்படுதல் வேண்டும்.