
உணர்வினை ஒளியாக மாற்றும் நிலை
நமக்குள் வெறுப்போ
சலிப்போ இதற்கு முன் அறியாத நுகர்ந்த
உணர்வுகளோ நோயாக உருவாக்கப்பட்டு உணர்வின் தன்மை வேதனைப்பட்டாலும்
அதை மாற்றி அமைக்க யாம் உபதேசிக்கும் உணர்வின்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும்
பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணும்பொழுது அதனுடைய வளர்ச்சியைக் குறைக்கலாம்… வளராது தடுக்கலாம்.
1.நமக்குள்
ஊழ்வினை என்ற வித்துகள் அதிகமாக இருக்கும் பொழுது
2.அதன் இன விருத்தியின் உணர்வுகளை நமக்குள் வளராதபடி தடுக்க
3.அருள்
ஒளியை நமக்குள் சேர்த்து இருளை உருவாக்கும் உணர்வினை மாற்றி
4.நமக்குள்
தெளிந்த மனதை நாம் உருவாக்கினால் நோய்களிலிருந்து விடுபடச் செய்யும்.
மனக்கவலையோ
மனசோர்வோ சஞ்சலமோ நமக்குள்
தோன்றும் பொழுதெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும்
பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பெற வேண்டும் என்று
1.அந்த அருள் உணர்வை எடுத்து உங்களுக்குள் தீமை வளராது இந்த உணர்வினைத் தடைப்படுத்துங்கள்.
2.நம்
ஈர்ப்புக்குள் வராததை நாம் கவராததை சூரியன்
கவர்ந்து மேலே அழைத்துச் சென்று விடுகின்றது.
3.தீமையான
உணர்வுகளுக்கு உணவு கிடைக்காது தடைப்படுத்தி
விடுகின்றது.
4.இவ்வாறு
நமது வாழ்க்கையில் தொடர்ந்து இந்தப் பணிகளைச் செய்தல் வேண்டும்.
5.இந்த உலகை
விட்டுச் செல்லும் வரையிலும் அருள் ஒளி
என்ற உணர்வினை நமக்குள் எடுத்து வளர்க்க வேண்டும்.
ஆனாலும்… இந்த
உடலை விட்டு உயிர் எப்படியும் சென்றே தான் ஆகும். எதனின் உணர்வை முதிர்வாகத் தனக்குள் வளர்த்தோமோ
அதற்குத்தக்க உணர்வு கொண்ட உடலை எடுக்கும்.
பேரருள் என்ற
உணர்வின் தன்மை நாம் எடுக்கப்படும் பொழுது பேரொளியான உணர்வுகளை உருவாக்குகின்றது.
இருள் சூழ்ந்த
ஒரு உடலுக்குள் நின்று அறிவென்ற நிலை இருந்தாலும்
உடலில் இருந்து இயக்குகின்றது. அறிந்துணர்ந்து செயல்படும் தன்மை இது.
1.அங்கே
அப்படி அல்ல…!
2.உணர்வினை ஒளியாக மாற்றும் நிலை பெற்றது
3.அந்த
உணர்வினை நமக்குள் எடுத்தால் அறிந்த அறிவின் தன்மை இயக்குவது
அல்ல.
4.உணர்வினை ஒளியாக மாற்றும்... அதை நுகர்வோருக்கு இருளை
அகற்றி அறிவைத் தெளிவாக்கும் நிலை வரும்.
இதன் தொடர்
வரிசையில் முழு முதல் கடவுள் என்று விநாயகர் தத்துவத்தில் கூறியது போல் மனிதனின் உயிர் மனிதனாக உருவாக்கிய பின் முழுமையினை உருவாக்கும் சக்தி பெற்றது.
பேரருள் என்ற
உணர்வினை உருவாக்கினால்
1.அந்த
ஒளியின் தன்மை கொண்டு நுகர்வோர் உணர்வுகளிலும் தீமைகளை அகற்றி “ஒளி” என்ற உணர்வினை உருவாக்கும் கடவுளாக நாம் ஆக
முடியும்.
2.உள் நின்று
தீமைகளை அகற்றி பகைமைகளை மாற்றி அருள் உணர்வைப் பெருக்கி ஒவ்வொரு மனிதனையும் நல்வழிப்படுத்தும்
நிலை வரும்.
ஆகவே நம்
முன்னோர்கள் சப்தரிஷி மண்டல எல்லையை அடைந்த நிலையில் துருவ தியானத்திலிருந்து தங்கள் குடும்பத்தில் அந்த அருள் சக்தியைப் பரவச் செய்தால்
1.உங்கள்
குடும்பத்தில் உடலை விட்டுச் சென்ற
மூதாதையர்கள் உணர்வுகள் இங்கே இருப்பினும்
2.அந்த அருள்
ஒளி என்ற உணர்வுகள் இந்த இருளை அகற்றி
3.நல்வழி
காட்டும் நிலையும் மெய்ப்பொருள் காணும் நிலையும் இல்லற வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தியும் பெற முடியும்.
அருள் வழி
வாழுங்கள் மெய்ப்பொருளைக் காணுங்கள் பிறவி இல்லாத
நிலை அடையுங்கள். விண் செல்லும் மார்க்கமாகத் துருவ தியானத்தைக் கடைப்பிடியுங்கள்.
இதன் தொடர்
கொண்டு உங்கள் வாழ்க்கையே தியானம்
ஆக்குங்கள். தீமை புகாது தடுக்க அருள்
உணர்வுகளைப் பெறுங்கள்… அதைப் பெருக்குங்கள்.
இல்லற
வாழ்க்கையில் வரும் துன்பங்களை அகற்றுங்கள்.
தன்னை அறியாது இயக்கும் தீமைகளை
தனக்குள் புகாது தடுத்து நிறுத்துங்கள். பேரின்பப் வாழ்வு என்ற நிலையில் வாழுங்கள்.
1.இந்த
வாழ்க்கையில் மகிழ்ச்சி பெறும் உணர்வினை வளர்த்துக்
கொள்ளுங்கள்.
2.அருள் ஒளி
என்ற உணர்வினைக் கூட்டுங்கள்… இருளை
அகற்றுங்கள்.