
அணுவின் இயக்கம்… உணர்வின் இயக்கம்…!
உதாரணமாக ஒரு வேப்ப மரத்தில் இருந்து வரும் கசப்பான சத்தைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்கின்றது. கவரப்படும் பொழுது வேப்ப இலை எந்த உருவமாக இருக்கின்றதோ அதனின் மணத்தை வெப்ப காந்தம் கவர்ந்த உடனே அந்த இலையைப் போலவே அந்த அனல் வீசும்.
1.மணத்தின்
நிலைகள் இலையைப் போலவே ரூபம் இருக்கும்.
2.அந்த இலை எப்படி இருக்கின்றதோ அதைப் போன்று அந்தப் பொறிகளை வீசி இலையின்
ரூபமாக இருக்கும்.
ஒரு இலுப்ப மரம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதனுடைய இலைகள் வட்ட வடிவமாக
இருக்கும். அதிலிருந்து வரக்கூடியது துவர்ப்பான சத்து.
1.அதைச் சூரியனுடைய வெப்ப காந்தம் எடுத்துக் கொண்டால்
2.அந்த அணுவைப் பார்த்தால் வட்ட வடிவமாக இருக்கும்.
இலுப்ப மரத்தின் துவர்ப்பான சக்தி அதிகமான ஆற்றல் இருப்பதால் அதற்குப்
பக்கத்தில் ஒரு ரோஜாச் செடி இருந்தாலும் இது அதைக் கவர்வதில்லை. அதனுடைய ஆற்றல்
இருக்கும் பொழுது நல்ல மணத்தை ஒதுக்கி
விடுகின்றது.
அதே போன்று வேப்ப மரத்திற்கு அருகில் நல்ல மணங்கள் வந்தாலும் இந்தக் கசப்பின் ஆற்றல்
இருக்கப்படும் பொழுது அதனுடைய வலுக் கொண்டு அதைத் தள்ளி விட்டு விடுகின்றது.
கசப்பான சத்து
இருந்தாலும் ரோஜாப்பூ தன் நல்ல நறுமணத்தைத் தான் அது எடுத்துக் கொள்கின்றது.. கசப்பை உள்ளே விடுவதில்லை.
ஏனென்றால் ஒவ்வொன்றின் ஆற்றலும் அத்தகைய தன்மை வாய்ந்தது.
ஆக வலுவான சக்தியாக இருப்பதால்
1.காற்றுக்குள் இருக்கும் நுண்ணிய அலைகளைச்
சிற்றலைகளாக வரும் பொழுது
2.தன் இனமான சக்தி சிறுத்திருக்கின்றது… அந்தச் சக்திகளை
அது எளிதில் கவர்ந்து கொள்கின்றது.
காற்றுக்குள் இருக்கும் தன் இனமான சக்திகளைத் தன் வலுவின் ஆற்றல் கொண்டு
கசப்பான சத்தைக் கவர்ந்து வேப்பமரம் வளர்கின்றது. அது வெளிவிடும் நிலையை காற்றுக்குள்
எவ்வளவு இது கலந்து இருந்தாலும் அடுத்த வேப்பமரம் இந்தச் சத்தை எடுத்து அது
வளர்கின்றது… தன் இனத்தை வளர்க்கின்றது.
ஆனால் இயற்கையின் மாற்றங்கள்… அணுக்களின் தன்மை தனித்துத்
தனித்து வேப்ப மரத்தின் கசப்பான சத்தை வெப்ப காந்தம் கவர்ந்து கொண்டால் அதே போன்று
இலுப்ப மரத்தின் சத்தை வெப்ப காந்தம் கவர்ந்து தனித்தனியாக அலை அலையாகச் செல்லும்
பொழுது
1.அதில் எந்த உணர்ச்சியின் தன்மை வேகமாக இருக்கின்றதோ
2.அதற்குத் தக்கவாறு அந்த அணுவின் நகர்ந்து செல்லும்
ஆற்றலும் இருக்கும்… வேகமாக இருக்கும்.
மனிதனைத் தேள் கொட்டி விட்டால் கடு…கடு… என்று அந்த விஷத்தின் தன்மை
ஏறுகின்றதல்லவா. இதைப் போலத் தான் ஒவ்வொரு நிலையிலும்
ஆற்றல்மிக்க அந்த உணர்ச்சிக்குத் தக்கவாறு விஷத்தின் ஆற்றல் கலந்துள்ளது. அது தான்
ஆவி.
அந்த இயக்கத்தின் தன்மையில் எந்தெந்தத் தாவர இனத்தின் விஷம் அதிகமாகக் கலந்திருக்கின்றதோ
கலந்த நிலைகளுக்கொப்ப அந்த உணர்வின் சக்தி பொறிகளாகக் கிளப்பக் கூடிய ஆற்றலும்
அதிகமாக உண்டு.
இந்த அணுக்களின் தன்மை இரண்டும் தனித்தனியாகப் போகும் போது வேகத்தின் துடிப்பு
படர்ந்து சென்றாலும் இதிலே கலந்திருக்கக்கூடிய நிலைகளுக்கொப்பத்தான்
இதனுடைய இயக்கச் சக்தி.
இந்த அணுக்கள் சந்தர்ப்பத்தால் ஒன்றுடன் ஒன்று மோதியுடனே வெப்பமும் காந்தமும்
ஒன்றாக இணைந்து கொள்கின்றது. இரண்டு வெப்ப காந்த அணுக்கள் ஒன்று சேர்க்கப்படும் பொழுது ஆற்றல்
அதிகமாகும். ஆனாலும் அந்த வேப்ப மரத்தின் கசப்பின் சத்தும் இலுப்ப
மரத்தின் துவர்ப்பின் சத்தும் இதுவும் இரண்டறக் கலந்து விடுகின்றது.
வேப்ப மரத்தின் ஆற்றல் விஷம் ஜாஸ்தி அது உமட்டல்… இயக்கச் சக்தி அதிகமாக இருக்கிறது.
இலுப்ப மரத்தினுடைய திகட்டல் கம்மி… உள்ளடங்கி
வட்ட வடிவமான நிலைகளில் இருக்கும் பொழுது அதை வெளிப்படுத்தும் நிலைகள் கொண்டு
1.வேப்ப மரத்தின் இலை ரம்பம் போன்று இருப்பது
2.அடுத்து இலுப்ப மரத்தின் இலை வட்டமாக இருக்கும்
இரண்டும் சேர்த்து புது விதமான இலையாக உருவாகின்றது
இது உணர்வின் இயக்கம்.
நாம் ஒரு காரத்தை வாயிலே போட்டால் ஆ…! என்று அலறுகின்றோம்.. ஆனால் கசப்பை
வாயிலே போடும்போது உமட்டலாக “ஓய்…”
என்று வெளிப்படுத்தும் சக்தியாக வருகின்றது.
இதே மாதிரி இயற்கையின் உணர்வின் அணுக்கள் அது சேர்க்கையாகும் பொழுது இந்த
அணுவின் தன்மைகள் ரூபங்கள் மாறும்.
இப்படிப் பல அணுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஒன்றுக்குள் ஒன்று அடக்கி இயக்கமாகி
காந்தத்தின் ஆற்றல் அதிகமாகி இப்படி நூறு அணுக்கள் நூறு விதமான தாவர இனத்தைக்
கவர்ந்து கொண்டு வந்தால் அதனுடைய கலவைக்குத் தக்கவாறு உணர்வின் நிலைகள் உருமாறி
இந்த உணர்வின் சத்துக்கொப்ப இயக்கச் சக்தியாக மாறி அந்த அணுவின் ஈர்ப்பு காந்தமும் வெப்பமும் அதிகமாகி
எடை கூடி புவியின் ஈர்ப்பிற்குள் அமைந்து விடுகிறது.
பூமிக்குள் அமைந்த நிலைகள் கொண்டு புவியின் ஈர்ப்பு காந்தத்தின் துணை கொண்டு வெளியில் இருந்து வரக்கூடிய வெப்பத்தின் தன்மையை ஈர்க்கும் தன்மை பெறுகிறது.
1.மழை பெய்யும் சந்தர்ப்பத்தில் ஒரு மின்னல் தாக்கப்படும் பொழுது
2.இந்த அணுவிற்குள் பட்ட உடனே அது துடித்து எழுந்து இயங்கத் தொடங்குகிறது.
அப்படி இயங்கும் பொழுது தனக்குள் எந்த உணர்வின் சக்தியை இது பெற்றுக் கொண்டதோ… காற்றிலே மிதந்து வரும் தன் இனமான சக்திகளை எத்தனை வகையான உணர்வுகளைத்
தனக்குள் அது ஈர்த்ததோ… அதைப் போன்று நுண்ணிய
அலைகளைப் பிரித்து இணைக்கச் செய்து…
அது ஒரு புதுச் செடியாக மரமாக புது இலைகளாக உருப்பெறுகின்றது.
புது விதமான செடியாக வளர்ந்து வரப்படும் பொழுது எத்தனை வகையான நிலைகள் இதிலே
சேர்த்து இருந்ததோ அந்தச்
சத்துக்குத்தக்கவாறு மரம் வளர்கின்றது.
மரமாக வளர்ந்து அந்த நூறு விதமான நுண்ணிய அலைகளைத் தனக்குள் பிரித்துச்
சேர்த்து அதற்குள் விளைந்து பூவாகி காயாகி கனியாகி வித்தை உருவாக்குகின்றது.
முதலிலே கவர்ந்த அணுவின் தன்மை அது செடியாகி மரமாகி அந்த உணர்வின் சக்தியை மீண்டும் வளர்த்து வித்தாக
உருப்பெறுகின்றது.
1.வித்தின் பரிணாமம் பெரிது.
2.ஆனால் முதலில் அணுவின் சக்தி சிறிது.
இதனின்று வளர்ந்த இந்த நிலைகள் பரிணாம வளர்ச்சியில் வருவது போல ஒரு உயிரணு புழுவில்
இருந்து மனிதனாக வரும் போது
தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உணர்வுகளை வளர்த்து வளர்த்து வளர்த்து வளர்ச்சிக்கு
வருகின்றது.
1.ஒவ்வொரு உணர்வின் சத்தாகச் சேர்க்கப்பட்டு தான் சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப
உடலின் அமைப்பாகி… ரூபங்களாகப் பரிணாம வளர்ச்சியாகி
2.எத்தனை கோடித் தாவர இனங்களை… உயிரினங்களாக இருக்கும்
பொழுது உட்கொண்டதோ
3.இந்த உணர்வுக்கொப்ப எண்ணத்தின் நிலையும்
4.அதனதன் உணர்வுக்கொப்பத் தற்காத்துக் கொள்ளும் உணர்வுகளைச்
சுவாசித்து… தன்னை தற்காத்துக் கொள்ளும் வினைகளைச் சேர்த்து
4.அது கலந்து சேர்த்துக் கொண்ட உணர்வின் அணுவின் தன்மை
அதற்குள் விளைந்தது
5.ஒவ்வொரு உயிரினமும் அதைத் தன் உயிரான்மாவாக வடித்துச் சேர்த்துக் கொள்கின்றது.