
குரு வழியில் “மாமகரிஷின் ஈஸ்வராய குருதேவரின் சீடர்களாக” நாம் அனைவரும் ஆவோம்
ஒருவர் திட்டினாலும் பேசினாலும் கவலையான நிலைகளாக இருந்தால் அதை எடுத்தால் நம் உடலுக்குள் வந்து விடுகின்றது. வேதனை வெறுப்பு
கோபம் சலிப்பு சஞ்சலம் இது எல்லாம் உடலுக்குள் வந்தபின் இந்த உடலான கோயிலில்
அசுத்தமாகின்றது… நோய்கள் ஆகின்றது பல வேதனைகள் ஆகின்றது.
1.”கூட்டுத்
தியானத்தின் மூலம்” நாம் அனைவரும் அந்தத்
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்று
2.எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும் என்ற உணர்வினைச்
செவிகளிலே பாய்ச்சப்படும் பொழுது
3.நமது கண்கள் இந்தக் காற்றிலிருக்கக்கூடிய
அந்த நல்ல உணர்வின் சத்தைக்
கவருகின்றது நம் உயிரிலே படுகின்றது.
4.இந்த உணர்வுகள் அனைத்தும் இரத்தத்தில் கலக்கின்றது.
இந்தக் கூட்டு
தியானத்தின் அமைப்பிலே இந்த உயர்ந்த உணர்வுகளைச் சேர்த்துப் பழகிக் கொண்டால்
1.உயிரான ஈசனுக்கும் இந்த அசுத்தம் சேர்வதில்லை.
2.இந்த உடலான கோவிலுக்குள் தீமைகள் புகாது
தூய்மைப்படுத்துகின்றோம்.
ஒருவன் திட்டினான் என்றால் அவனை
நாம் மீண்டும் எண்ணுகின்றோம். அப்போது
புரையேறுகிறது. தொழிலில் எத்தனையோ இடைஞ்சல்
ஆகிறது.
ஆனால் கூட்டுத்
தியானத்தின் மூலம் அத்தனை பேரும் சேர்ந்து அந்த அருள்
உணர்வுகள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று அந்தத்
துருவ நட்சத்திரத்தின் பேர்ருள் பேரொளியைக் கிடைக்கச்
செய்யக்கூடிய சந்தர்ப்பம் உருவாகின்றது.
எல்லோருடைய உடல்களிலும் அருள் உணர்வுகள் வளர வேண்டும்… எங்கள் ஜீவான்மா
ஜீவணுக்கள் பெற வேண்டும்… எங்கள்
தொழில் நன்றாக இருக்க வேண்டும்… உடல் நலமாக இருக்க வேண்டும்… எங்கள் குழந்தைகள் நலமாக இருக்க வேண்டும்… என்று
1.கூட்டு தியானங்களில் இதைப் போன்று எடுத்துக்
கொண்டால்
2.உங்களுடைய வாக்கு எல்லோருக்குள்ளும் ஆழமாக இது
பதிந்து நோய்களைப் போக்க முடியும்.
3.குருநாதர் காட்டிய அருள் வழியில் நீங்களும் பெரிய மகானாக முடியும்
4.உங்களுடைய மூச்சு பிறருடைய துன்பங்களைப் போக்க
வேண்டும்.
5.நீங்கள் நுகர்ந்த உணர்வுகள் உங்களை அறியாத சேர்ந்த துன்பங்களை அகற்றும்.
இதை நாம் வலுப்பெறச் செய்தல்
வேண்டும்.
நாளைக்கு வரும்
விஞ்ஞான உலகத்தால் காற்று மண்டலம் நச்சுத்தன்மை அடையும் பொழுது “அந்த விஷங்கள் நமக்குள் சேர்ந்து”
1.நமது சிந்தனையை அழித்துவிடக் கூடாது.
2.அருள் உணர்வுகளை அழித்துவிடக் கூடாது.
3.அருள் உணர்வுகளை நமக்குள் பெருக்கும் வலிமை பெற வேண்டும்.
அதற்காகத்தான் இதைச் சொல்கின்றேன்… உங்களால் முடியும்.
நான் உங்களுக்குச் சொல்லும்
பொழுது உடனே நல்லதாகின்றது. ஏன்..? நீங்கள் அடுத்தவர்களுக்குச் சொன்னால் அவர்களுக்கு
நல்லதாக்க முடியும் அல்லவா.
1.அந்த அளவுக்கு நமக்குள் பெருக்கி விட்டால் காற்றிலிருக்கக்கூடிய
தீமைகளை ஒதுக்கித் தள்ளிவிடலாம்.
2.நாட்டு மக்களைக் காக்கலாம் நல்லவர்களைக் காக்கலாம்.
3.நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை வளர்க்கலாம்… பகைமையற்ற வாழ்க்கை வாழலாம்.
4.உயிருடன் என்றும் ஒன்றிடலாம்… அகஸ்தியன் துருவ நட்சத்திரம் ஆனது போன்றது என்றும் நாம் வாழ முடியும்.
5.மனதை ஒன்றாக்கப்படும் பொழுது ஒளியின் சுடராக முடியும்.
குறுகிய காலமே நாம் வாழுகின்றோம். மனதை ஒன்றாகக் குவித்து நாம் வாழ
வேண்டும் உடலில் அறியாது சேர்ந்த பகைமைகளை அகற்றிப் பண்பைக் காட்டி… அன்பைக் காட்டி.. அரவணைத்து… அருளைப் பெருக்க வேண்டும் என்று
நமக்குள் செலுத்த வேண்டும்.
நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் அதைச் செயல்படுத்த வேண்டும்.
இந்தக் காற்று
மண்டலத்தில் விஞ்ஞானத்தினால் பரவப்பட்டுள்ள நச்சுத்தன்மைகளை நாம் அனைவரும்
சேர்ந்து அகற்றுவோம். அருள் வழியில் வாழ்வோம்… அதை நாம் செயல்படுத்துவோம்.
ஒவ்வொரு நொடியிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணவுகளை நாம் பெறுவோம்.
அதுதான் நம்முடைய கடைசி எல்லை. இந்த உடலுக்குப் பின் அந்த எல்லையை அடைவோம்.
அந்த எல்லை எங்கு இருக்கின்றது…?
1.நம் உயிருடன் ஒன்றி அந்த உணர்வைக் கூட்டினால் அவனே நம்மை அழைத்துச் செல்கின்றான்.
2.ஒளியின் உடலாக நம்மை உருவாக்குகின்றான்.
இல்லை… எனக்குத் தீமை செய்கிறான் என்ற உணர்வை ஊட்டினால் தீமை
செய்யும் உடலுக்குள்ளே உயிர் நம்மை அழைத்துச் சென்று விடும்.
ஆக நாம் எண்ணிய நிலைக்கொப்பத் தான் உயிர் அழைத்துச் செல்கின்றது.
ஆகவே நாம் அருள் வழியைப் பெறுவோம்
பேரருளைக் கூட்டுவோம். யாம் உபதேசித்த
உணர்வுகள் அனைத்தும் உங்கள் உடலிலே படரப்பட்டு நமது குருவின்
உணர்வுகளை நீங்கள் பெற்று அகண்ட அண்டத்தையும் அறிந்துணரும் சக்தி பெறுவீர்கள்.
உங்கள் வாழ்க்கையில் வந்த இருண்ட நிலையை நீக்கி அனைவரும் மகிழ்ந்து வாழும்
சக்தியை நீங்கள் பெற்று அதை மகிழ்ந்து வாழும் உணர்வை உங்களுக்குள் ஊட்டி “உங்கள் பேச்சால்
மூச்சால் உலக மக்களைத் தெளிந்து வாழும்
மக்களாக வாழச் செய்யுங்கள்…”
1.இந்தக் காற்று மண்டலத்தில் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பரவச்
செய்யுங்கள்.
2.நமது குரு அருளை உலக மக்களுக்குப் பெறச் செய்யுங்கள்… நீங்களும் அதைப் பெற்று வளருங்கள்.
3.நம் குரு வழியில் அவருடைய சீடர்களாக நாம் அனைவரும் ஆவோம்.
4.அவர் ஒளியின் தன்மை பெற்றார்… அந்த உணர்வின் தன்மை
நமக்குள் ஒளியைக் கூட்டுவோம்.
நம் பேச்சும் மூச்சும்
பிறருடைய இருளைப் போக்கட்டும்…
மெய்ப்பொருளைக் காண்போம். இந்த
உடலுக்குப் பின் பிறவி இல்லை என்ற நிலை அடைவோம். அந்த அருள் சக்தியைப் பெறுவோம்… அனைவரையும் பெறச் செய்வோம்… அருள் வாழ்க்கை
வாழ்வோம்… மெய் வாழ்க்கை வாழ்வோம்.