ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 2, 2025

அத்வைதத்தின் உணர்வுகளை எல்லோரும் அறிவதற்குத் தான் ஆலயங்களை அமைத்தனர் ஞானிகள்

அத்வைதத்தின் உணர்வுகளை எல்லோரும் அறிவதற்குத் தான் ஆலயங்களை அமைத்தனர் ஞானிகள்


ம் ஈஸ்வரா குருதேவா…! என்று சொல்லும் பொழுது உங்கள் உயிர் உங்கள் உடலுக்குள் நின்று ஓ என்று இயங்கிக் கொண்டுள்ளது. நாம் கேட்டது பார்த்தது நுகர்ந்தது அனைத்தையும் ஓ என்று இயக்கி ம் என்று உடலாக மாற்றிக் கொண்டே உள்ளது.
 
அதாவது நம் உயிர் எப்படி இயக்குகின்றதோ இயங்குகின்றதோ இதைப் போல
1.நாம் நுகர்ந்த உணர்வுகள் அந்தக் குணங்கள் அனைத்தும்
2.நம் உடலில் உள்ள ரத்தங்களில் கலந்து மீண்டும் ஜீவணுவாக உருவாக்குகின்றது ருப்பெறுகின்றது.
3.ஆகவே உருவாக்கக் கூடிய சக்தியை நம் உயிரை ஈசனாக மதித்து நட்த்தல் வேண்டும்.
 
திலே ஏற்படும் வெப்பம் விஷ்ணு ஈர்க்கும் காந்தம் லட்சுமி நாம் எத்தகைய குணத்தை நுகர்கின்றோமோ அக்குணம் நம் உயிரிலே மோதும் பொழுது அந்தந்தக் குணத்தின் சத்துகள் வெளிப்படுகின்றது.
 
அதனால் தான் “சங்கு சக்கரதாரி” என்று உருவம் (விஷ்ணுவுக்கு) அமைத்து
1.அருவ நிலைகளில் நடப்பதை நம் உடலில் நாம் நுகர்ந்த எத்தகைய குணமோ
2.அத்தகைய உணர்ச்சிகள் நம் உடலில் எவ்வாறு இக்குகின்றது…? செயல் ஆக்குகின்றது…?
3.அந்த உணர்வலைகள் சுழன்று எப்படி உடலாகின்றது…? என்பதனை நாம் அறிவதற்குத் தான்
4.அதாவது கண்ணுக்குப் புலப்படாது சூட்சுமத்தில் நடப்பதை அத்வைதம்”.
5.தை உருவமாக்கி துவைதமாக்கி அதற்குக் காரணப் பெயர் வைத்து
6.உயிரின் இயக்கத்தை நாம் அறிந்து கொள்வதற்காக ஞானிகள் இவ்வாறு வெளிப்படுத்தி உள்ளார்கள்.
 
எல்லோரும் அத்வைதத்தின் உணர்வுகளை அறிய முடியாது.
 
ஆகவே உருவம் அமைத்து நினைவுபடுத்திக் காவியம் படைத்துக் காவியத்தின் வழியிலே கருத்தினை நுகரும்படி செய்து அதன் உணர்வுகள் நம் உயிரிலே பட்டு
1.அந்த உணர்ச்சிகளை உடல் முழுவதும் சேர்க்கச் செய்து
2.நல்ல குணங்களை நம் ரத்தத்தில் கலக்கச் செய்வது தான் துவைதத்தின் அமைப்பு.
 
எந்தக் குணத்தின் தன்மையை நாம் நுகர்கின்றோமோ நுகர்ந்து உயிரிலே படும் பொழுது விசிஷ்டாத்வைதம் என்று காரணப் பெயர் வைக்கிறார்கள்.
 
சிலையைப் பார்க்கும் பொழுது காவியப் படைப்பின்படி இது துவைதம். அந்தக் கருத்துக்களை வெளிப்படுத்தும் போது அந்தக் கருத்தினை எண்ணி ங்கும் பொழுது அந்தக் குணம் உயிரிலே பட்ட பின் உணர்ச்சிகளாக வெளிப்படுத்துகின்றது. நாமும் அறிய முடிகின்றது இந்த உடலையும் இயக்குகின்றது.
 
அதனால் இது விசிஷ்டாத்வைதம்…! நம் உடலுக்குள் இந்த உணர்வுகள் எப்படி இயக்குகின்றது எப்படி இயங்குகின்றது என்பதை நாம் அறியும்படி செய்தார்கள் ஞானிகள்.
 
சாதாரண மக்கள்
1.கல்வி கற்காதவரும்… கற்கவே இல்லை என்றாலும் கருத்தினைக் கவர்ந்து உணர்வின் செயலை அறிந்து
2.அதன் வழியில் அருள் வழியில் செயல்படும்படி செய்தனர் அதன் வழி தான் ஆலயங்களை அமைத்தனர் ஞானிகள்.