
ஆதியும் அந்தமும் அறிந்துணர்ந்த அகஸ்தியன்
நாம் மனிதனாக எப்படி
வந்தோம்…? என்பதைத்தான் விநாய புராணம் கந்த புராணம் மகாபாரதம் இராமாயணம் போன்ற காவியங்கள்
நமக்குத் தெளிவாகக் கூறுகின்றது.
1.அகஸ்தியன் தனக்குள்
இது எல்லாம் எப்படி…? என்று பல வினாக்களை எழுப்பித் துருவத்தின் ஆற்றலை எண்ணி
2.சூரியன் எப்படி உருவானது…?
சூரியன் உருவாகுவதற்கு முன் என்னவாக இருந்தது…? என்று
3.இவனுக்குள் பட்ட…
இடி மின்னல்கள் கலந்து செல்லும் உணர்வுகளை இவன் தாய் கருவிலேயே பெற்றதனால்
4.பூர்வ புண்ணியமாக
அறியும் தன்மை கொண்டு… அவனுக்குள் அறியும் ஞானமும் அதை வளர்த்துக் கொள்ளும் சக்தியும்
பெறுகின்றான்.
அதன் வழி வசிஷ்டர்…!
1.“தான் தெரிந்து கொள்ள
வேண்டும் என்ற ஆசையால்” அவனுக்குள் நுகர்ந்தான்… உணர்ந்தான்…!
2.அவன் உடலில் விளைந்தது
அதன் வழி விளைந்தது தான் துருவனான பின்
3.“இந்த அகண்ட அண்டத்தையும்
எப்படி அறிந்து கொள்ள வேண்டும்…? என்று “மேலும்” அவனுடைய உணர்வுகளை விரிவடையச் செய்கின்றான்.
அப்படி விரிவடைந்த நிலையில்
தான் சூரியன்களும் கோள்களும் இல்லாத பொழுது எப்படி உருவானது…? என்ற நிலையை அறிய அவனுடைய
உணர்ச்சிகள் தோன்றுகின்றது.
ஏனென்றால் அகண்ட அண்டத்திலிருந்து
கவர்ந்து தான் சூரியன் தனது சக்திகளை எடுக்கின்றது. பிரபஞ்சத்தில் உருவான கருவின் தன்மை
தான் வான இயல் புவியியலாகி தாவரவியலாகி உயிரியலாக அந்த உணர்வுகளைக் கவர்ந்து மனித உடலாகி
உணர்வுகள் எண்ணங்களாகி எண்ணத்தின் தன்மை வலுப் பெற்றது. அப்படி வளர்ந்தவன் தான் அகஸ்தியன்.
இந்த உண்மையின் நிலையைப்
படித்தவர்கள் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். படிக்காதவர்களுக்குள் பதிவானால் நினைவு வருகின்றது.
ஆனாலும் படித்தவர்கள்
பெரும் பகுதி என்ன செய்கின்றார்கள்…? இதற்கும் அதற்கும் எப்படி…? இது உண்மையா அது பொய்யா…?
என்று கலக்கப்பட்டு உண்மையை அறியும் நிலையை தனக்குள்ளேயே தடைப்படுத்திக் கொள்ளும் நிலையே
வருகின்றது.
1.இதைப் போன்ற நிலைகளில்
இருந்து விடுபட்டு
2.உங்களுக்குள் பேருண்மைகளைப்
பதிவாக்கும் நிலைக்குத் தான் இந்த உபதேசம்.
அன்று தாய் கருவிலே
பெற்ற சக்தியின் துணை கொண்டு அகஸ்தியன் உண்மைகளை அறிகின்றான்.
மாமிசங்கள் உண்பதையும்
மற்ற நிலைகளையும் விடுத்து விட்டு வேகவைத்துப் பல பொருள்களைச் சுவையாகச் சேர்த்து மகிழ்ச்சி
ஊட்டும் உணர்வை உருவாக்கி அத்தகைய உணர்வின் எண்ணங்களைத் தனக்குள் தோற்றுவித்து உலகத்தையும்
பிரபஞ்சத்தையும் அவைகளின் இயக்கங்களைத் தெளிவாக அறிகின்றான்.
இந்தப் பிரபஞ்சத்தைச்
சேர்ந்த 27 நட்சத்திரங்களுடைய உணர்வுகள் ஒன்றுக்கொன்று இணைந்து எவ்வாறெல்லாம் இயக்குகின்றது…?
என்பதையும் தெளிவாகத் தெரிந்து கொண்டவன் அகஸ்தியன்.
1.துருவனான பின் அகண்ட
அண்டத்தையும் அவன் அறிய ஆரம்பிக்கின்றான்.
2.சூரியக் குடும்பம்
ஆவதற்கு முன் பிரபஞ்சம் எப்படி இருந்தது…? என்பதையும் தனக்குள் கண்டறிந்து மூச்சலைகளாக
வெளிப்படுத்தியுள்ளான்
3.இதையெல்லாம் நாமும்
கவர்ந்தோம் என்றால் அவன் கண்ட பேருண்மைகளை நாமும் காண முடியும்… உணர முடியும்.