வளர்ச்சிக்குக் காந்த சக்தி மிகவும் அத்தியாவசியம்
உதாரணமாக ஒரு டேப்பின் நாடாவிலே நாம் பதிவு செய்யும் பொழுது அதற்குள் காந்தப்புலன் இருக்க வேண்டும். நாம் எடுக்கும் உணர்வை அது ஈர்க்கும் ஆற்றல் இருந்தால் தான் அதிலே பதிவாகும்.
2.காந்தம் இல்லை என்றால் ஈர்க்கும் திறன் இழக்கின்றது.
ஒரு குளவி புழுவைத் தன் விஷத்தால் கொட்டுகின்றது. குளவிக்குள் இருக்கும் விஷத்தின் அமிலத்தை அது கொட்டும் பொழுது “புழுவிற்குள் இருக்கக்கூடிய காந்தப்புலன்” அதைக் கவர்ந்து கொள்கின்றது.
2.புழுவிற்குள் இருக்கக்கூடிய காந்தப்புலன் துடிக்கும் நிலையான இயக்கத்தின் தன்மை கொண்டு வருகின்றது.
ஒரு மத்தாப்பை நாம் நெருப்பை இட்டுக் கொளுத்தினோம் என்றால் அதில் சேர்த்துக் கொண்ட உணர்வின் பொறிகளுக்கொப்ப ரூபங்கள் பல பல நிலைகளாக மாறுகிறது.
அதைப் போன்று… பொதுவாக உயிரினங்கள் தாவர இனத்தை மணமாக எடுத்துக் கொண்டாலும் அந்த மணத்தின் சத்தின் தன்மையை…
2.தான் எடுத்துக் கொண்ட உணர்வின் சத்துக்கொப்ப விஷத்தன்மையாக வளர்க்கப்பட்டு
3.அந்த விஷத்தைத் தான் குளவி புழுவின் மீது கொட்டுகிறது.
அப்பொழுது புழுவின் உடலில் இருக்கும் காந்த செல்கள் அந்த உணர்வுகளைக் கவர்ந்து அந்த உணர்வுக்கொப்ப “உயிரின் ஓட்டத்தால் காந்தப் புலனின் இயக்கத் தொடர்கள் வரிசைகளில் இயங்கப்படும் பொழுது” இந்த உணர்வுக்கொப்ப உணர்வின் இயக்கங்கள் அந்த உடலில் இருக்கும் உறுப்புகளை அதனை அமைக்கின்றது.
ஆகவே எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்பத் தான் ஒவ்வொரு செயலின் தன்மையும் அமைகின்றது.
இதனால் தான் குளவி புழுவை எடுத்து அதற்குள் நஞ்சைப் பாய்ச்சும் போது அதனுடைய துடிப்பைத் தாங்காது “நினைவலைகளைக் குளவியின் பால் செலுத்துகின்றது புழு…”
குளவி தனக்குள் சுரக்கும் உமிழ் நீரை மண்ணிலே கொட்டி மண்ணைப் பிசைகின்றது. அதற்குள் தன்னுடைய சப்தத்தை டைங்…டைங்…டைங்… டும்…டும்…டும்… என்ற நிலைகளிலே இந்த உணர்வின் நாதங்களைப் பதியச் செய்து குளவி தன்னுடைய நினைவலைகளை… தன்னுடைய ஒலிகளைப் பரப்பச் செய்கின்றது.
கல்லானாலும் சரி… மணலானாலும் சரி… அது அது தனது காந்தப்புலனின் நிலைகள் கொண்டுதான் தன் உணர்வின் சத்து எதனுடன் எது கலந்ததோ அது தனக்குள் இட்டு பூமியின் காந்தப்புலனுடன் ஐக்கியமாகி அந்த ஐக்கியத்தின் தொடர் கொண்டு அது வளர்கின்றது.
அதைப் போல மண்ணுக்குள் அது தனித்திருந்தாலும் குளவி தனக்குள் எடுத்துக் கொண்ட தாவர இனச் சத்தைத் தன் உடலாக மாற்றினாலும்
1.உணர்வின் ஒளி ஒலி என்ற நிலைகள் கொண்டு அது வடித்து
2.உணர்வின் நாத ஒலிகளாகச் சுரக்கச் செய்யும் இந்த உணர்வின் தன்மையை தன் உணர்வின் தன்மை எதுவோ
3.தன் எண்ணத்தின் நிலைகள் கொண்டு இந்த மண்ணிற்குள் பதிவு செய்து உருட்டுகின்றது.
உருட்டப்பட்ட இந்த மண்ணால் கூடு கட்டும் பொழுது அந்த கூட்டிற்குள்ளும் தன் நாத சுரப்பியின் தன்மையை அது இயக்கச் செய்கின்றது.
நாம் எதையாவது தட்டியவுடனே அதிர்வுகள் எப்படி ஏற்படுகின்றதோ… இதைப் போன்று நாதத்தின் தன்மையை சுருதியால் தட்டிய உடனே அது உருப் பெறும் சக்தியாக “அந்தக் கூட்டைக் கட்டுகின்றது…”
பின் புழுவைக் குளவி தூக்கி வருகின்றது. அது எடை கூட இருந்தாலும் அதைப் பலவீனப்படுத்துவதற்காக ஒரு கொட்டு கொட்டுகின்றது. அதனுடைய துடிப்பைச் சாந்தப்படுத்தித் தன் உணர்வின் நிலைகள் கொண்டு தன் சக்திக்கு மீறிய புழுவையும் தூக்கிக் கொண்டு வந்து கூட்டுக்குள் வைக்கின்றது.
கூட்டிற்குள் வைத்த பின் மீண்டும் தன் விஷத்தின் தன்மையை அதன் உடலில் பாய்ச்சுகின்றது. புழுவின் மேல் தோல் சருகுபோன்று ஆகின்றது அந்தச் சருகிற்குள் புழுவின் தசைகள்… தசைகளை உருவாக்கிய அணுக்கள் இதற்குள் சிக்கிக் கொள்கின்றது.
1.புழுவின் இயக்கத்திற்கு உயிரான துடிப்பின் இயக்கம்
2.அதற்குள் இருக்கக்கூடிய காந்தம்… அது வெப்பம் ஏற்படுத்தும் நிலைகள்… அது இயக்கச் சக்தி
3.இந்த விஷத்தின் தன்மை கொண்டு வரும் பொழுது இந்த செல்களின் துடிப்பு கொண்டு உயிரின் துடிப்பு அதிகமாகின்றது.
அதிகமான துடிப்பு ஏற்படும் போது கூட்டிக்குள் தான் எடுத்துக் கொண்ட உணர்வின் நிலைகள் மோதுகின்றது. அந்த மோதலின் தன்மை கொண்டு இயக்கச் சக்தியினைத் தொடர்ந்து
2.அது எடுத்துக் கொண்ட உணர்வின் நிலையைத் தனக்குள் வெப்பமாக எடுத்துக் கொண்டு
3.புழுவின் உடலை உருவாக்கிய ஆற்றல்மிக்க காந்தப்புலனின் செல்களில் குளவியின் சத்தான விஷத் தன்மைகள் பட்டதனால்
4.புழுவின் தசைகள் இந்த உணர்வின் நிலைகள் கொண்டு ஆவியாக மாறி
5.ஆவியின் தன்மை மீண்டும் உயிரின் காந்த ஈர்ப்பிற்குள் வந்து இது உறைந்து
6.அந்த உணர்வின் பொறிகளுக்கொப்ப செல்கள் விளைந்து குளவியின் ரூபம் பெறுகின்றது.
இப்படிக் குளவியாக ரூபம் பெற்றபின் தாய்க் குளவிக்கு எப்படி உமிழ் நீர் சுரந்ததோ அதைப் போன்று இதற்குள்ளும் உமிழ் நீர் சுரக்கின்றது. அதனின் துணை கொண்டு அடைப்பட்டிருந்த மண் கூட்டினை இளக வைத்து… குடைந்து… துவாரமிட்டு… தன்னிச்சையாக குளவியாக வெளியே வருகின்றது.
ஆனால் இதற்கு யார் சொல்லிக் கொடுத்தது…? யாரும் சொல்லிக் கொடுக்கவில்லை.
அந்தத் தாய்க் குளவி எதைச் செய்ததோ மீண்டும் இந்தக் குளவி அதையே செய்யத் தொடங்குகிறது. “அதற்குள் இருக்கக்கூடிய உணர்வின் இயக்கம் தன் நினைவலைகளை இயக்கி அவ்வாறு அதைச் செய்யச் செய்கின்றது…”