ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 7, 2025

ஞானிகள்… நினைவு நாளைக் கொண்டாடச் சொன்னதன் நோக்கம்

ஞானிகள்… நினைவு நாளைக் கொண்டாடச் சொன்னதன் நோக்கம்


உடலை விட்டுப் பிரிந்து செல்லும் உயிரான்மாக்களை விண் செலுத்தி அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து விட்டால்
1.அவர் உடலில் விளைந்த உணர்வுகள் எப்படி அங்கே கரைந்ததோ
2.உடலில் பெற்ற உணர்வு ஒளியின் உடலாகப் பெற்றதோ அவரை எண்ணி
3.அந்த உணர்வின் தன்மையை ஒளியின் உடலாக பெறச் செய்த இந்த உணர்வுகளை நினைவு கூர்ந்து
4.நாம் அந்த ஆன்மாக்களை விண் செலுத்தும் பொழுது அந்த உணர்வுகள் நமக்குள் பதிவாகின்றது.
 
துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வுகளை அவர் சார்புடைய நிலைகள் அங்கே இருந்தாலும் நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எளிதில் பெற்று அவர் சம்பந்தப்பட்ட உணர்வுகள் ஏனென்றால்
1.கண் கூர்ந்து கவனிக்கும் பொழுது கருவிழியால் பதிவான உணர்வுகளை அதே நினைவு கொண்டு
2.அவர் நினைவு நாளில் இதைப் போன்று நாம் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று செயல்படுத்துவோம் என்றால்
3.அவர் குறை கூறிய உணர்வோ அல்லது குடும்பத்தின் மீது இருந்த வெறுப்புணர்வோ
4.அவர் நோயாக வேதனைப்பட்ட உணர்வோ நமக்குள் பதிவாகி இருந்தாலும் அந்தப் பதிவின் மீது இது வந்து மேலே பதிவாக்கும்.
 
ஒரு வித்து விளைந்த பின் மற்ற தாவர இனங்களின் வித்துக்களை தனுடன் கலக்கச் செய்து அதிலே புது விதமான வித்துகளை உருவாக்குவார்கள்.
 
அதைப் போன்று உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்தபின் உடல் பெறும் உணர்வுகள் கரைந்தது போக அவருடன் உணர்வுகள் ஒளியாக நிற்கும்…”
 
அந்த நிலையில்
1.நினைவு நாளில் நாம் அதை எண்ணிக் கொண்டு வந்தோம் என்றால் உடலுக்குள் பதிந்த அவரின் உணர்வை மாற்றி விடலாம்.
2.அதே சமயத்தில் அவர் உடலில் இருந்து வந்த உணர்வுகள் காற்றலைகளில் இருப்பினும் அதை ஈர்க்கும் சக்தியை இங்கே தடுத்து விட்டால்
3.அவர் உடலில் இருந்த நோயோ அவரைப் பற்றிய பகைமை உணர்வுகளோ நம்மை இயக்காது.
 
அதற்குத் தான் இந்த நினைவு நாளைக் கொண்டாடச் சொல்வது.
 
அவரின் உணர்வுகள் நம் உடலில் பதிந்திருப்பதால்
1.அவர் உணர்வுக்கு நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உணவாகப் படைத்தால்
2.நமக்குள் தீமை என்ற உணர்வு இல்லாது மறைக்கப்படுகின்றது.
3.நினைவு நாளைக் கொண்டாடுவதற்கு அன்று ஞானிகள் இவ்வாறு வழி வகுத்தனர்.
 
துருவ நட்சத்திரத்தின்ணர்வுகள் நமக்குள் பதிவானாலும் அதன் தனித்தன்மை கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணும் போது தான் வருகின்றது.
 
ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்றால் இந்த வாழ்க்கையிலே வெறுப்பு வேதனை சலிப்பு கோபம் பகைமை என்ற உணர்வுடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
 
ஆனால் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுக்கப்படும் பொழுது சிறிது நேரமே செயல்படுத்துகின்றோம். ஒரு நாளைக்கு காலையில் எழுந்ததும் செயல்படுத்துகின்றோம்.
 
அதற்குப் பின்
1.ஏதாவது சிரமம் வந்தால் அந்தச் சிரமத்தை தான் எடுத்துக் கொள்கிறோம்.
2.ஆனால் அவரைப் பற்றிய நினைவு நமக்கு வருவதில்லை.
3.ஆனால் அந்த வேதனைப்படும் உணர்வுகள் தூண்டி அதை வளர்க்கின்றோம்.
 
தைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் மாற்றி அமைக்க உடலை விட்டுப் பிரிந்து சென்று அந்த ஆன்மாவிற்கு
1.நம் உடலில் அந்த\த் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பதிவான (அவரைப் பற்றியது) நிலைகளுடன் சேர்த்து விட்டால்
2.அவர் உடலில் இருந்து வெளிப்பட்ட உணர்வுகள் காற்றில் இருப்பதை நாம் நுகராமல் நமக்குள் அது வளர்ச்சி பெறாமல்… தடுத்து நிறுத்த முடியும்.