ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 19, 2025

மலைப் பகுதிகளில் குருநாதர் எனக்குக் காட்டிய இயற்கையின் பேருண்மைகள்

மலைப் பகுதிகளில் குருநாதர் எனக்குக் காட்டிய இயற்கையின் பேருண்மைகள்


அகஸ்தியனுடைய தாய் தந்தையர்கள் எத்தனையோ வகையான மிருகங்களிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ளும் பச்சிலைகளைக் கண்டு எடுக்கின்றார்கள்.
1.அந்தப் பச்சிலைகள் எப்படி உருவானது…?
2.அதற்கு அந்த ஆற்றல் எவ்வாறு வந்தது…? என்பதனைக் குருநாதர் எனக்குக் காட்டுகின்றார்.
 
தொடர்ந்து மலைப்பகுதிகளுக்கு அழைத்துச் சென்றார். இரண்டு வருடம் அங்கே அலைந்து திரிந்தேன்.
 
அக்காலங்களில் ஒரு மிருகம் மற்றொன்றை எப்படிக் கொன்று புசித்தது…? அதைக் கொன்று புசித்த பின் அந்த மாமிசத்தை மற்றவைகள் உட்கொள்ள முடியாத நிலை ஆகிறது.
 
கழுகு காக்கைகள் மட்டுமே உட்கொள்கின்றது. ஆனால் சிறிது காலம் கழித்து அது அழுகிய மணம் வந்த பின்பு தான் அந்தக் கழுகுகள் பறந்து வந்து அதனை நுகர்ந்து உட்கொள்ள வருகின்றது.
 
ஆனால் அதே சமயம் இது மடிந்த பின் இது உடலில் இருந்து வரக்கூடிய ஆவியின் தன்மையை சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது அலைகளாக மாறுகின்றது பரவுகின்றது…!
 
அந்த உடலை (அழுகிய) உருவாக்கிய அணுக்கள் திறந்த வெளிக்கு வந்தபின் அதையே உணவாக உட்கொள்ளும் புழுக்களாக அதிலே உருவாகின்றது. புழுவாக உருப்பெற்றாலும் உட்கொண்டு இரை தீர்ந்தபின் அவைகளும் மடிந்து விடுகின்றது.
 
1.மடிந்த உயிரான்மாக்கள் வெளியே செல்கின்றது.
2.சென்றாலும் எந்தெந்த உயிரினங்களை இது அடித்து உணவாகப் புசித்ததோ அந்த உணர்வின் துணை கொண்டு
3.அந்தந்த மிருகங்களின் உடலில் பட்ட பின் ஈக்களாக உண்ணிகளாக உருவாகின்றது.
4.அதன் ரத்தத்தை உறிஞ்சி உணவாக உட்கொள்கின்றது.
 
இதையெல்லாம் காட்டுப் பகுதியில் வைத்து குருநாதர் காட்டுகின்றார்.
 
தாவர இனங்களை உணவாக உட்கொண்டு உடல் பெற்றுத் தான் வாழும் நிலையானாலும் அது மடிந்த பின் மற்றதைக் கொன்று குவிக்கும் புலியோ நரியோ நாயோ மற்ற உடலைப் புசிக்கும் உணர்வு கொண்ட நிலைகள் மடிந்த பின் இவை எல்லாம் என்ன ஆகின்றது…? என்பதனை காட்டுக்குள் அழைத்துச் சென்று பார்க்கும்படி செய்கின்றார்.
 
உடலில் இருந்து சென்ற ஆவிகளைச் சூரியனின் காந்த சக்தி எடுத்து அலைகளாக மாற்றுகின்றது. ஒரு ஆட்டின் உடல் பெற்ற பின் நரியின் உணர்வைக் கவர்ந்து கொண்ட பின் இதைக் கண்ட பின் ஆட்டின் உடலில் இருந்து வெளிப்பட்ட உணர்வுகள் இதைக் கண்டு அஞ்சி ஓடுவதும் ஓடு பாதையில் இன்னொரு தாவர இன சத்தைச் சூரியனுடைய காந்த சக்தி எடுத்துக் கொண்டால் இதற்குள் ஊடுருவி சுழற்சியின் தன்மை அடைந்து ஒன்றுடன் ஒன்று மோதுகிறது.
 
மற்ற உயிரினங்களாகப் பெற்ற பின் இதனுடைய மணம் வெளிப்பட்ட பின் இது மூன்றும் இரண்டறக் கலக்கின்றது.
 
மோதலில் ஏற்படும் சக்தியைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து கொண்ட பின் தாவர இனத்தின் அடர்த்தி அதிகமாகி இதனுடன் இணைந்து விடுகின்றது. இணைந்த பின் ஒரு வித்தாகின்றது நிலத்தில் பதிவாகின்றது.
 
வித்தான பின் புவியின் கால நிலைகள் கொண்டு மழை நீரோ மற்ற ஈரப்பசை கொண்ட காற்றலைகள் வரப்படும் பொழுது செடியாக முளைக்கின்றது. முளைத்து விட்டால்
1.இது எதையெல்லாம் கொன்று புசித்ததோ அந்தச் செடி தன் அருகிலே வரக்கூடிய மிருகங்களை உயிரினங்களை
2.தன் கொடிகளைப் பாய்ச்சி அதனின் இரத்தத்தை உறிஞ்சி குடிக்கின்றது.
 
உயிரணு பெற்ற பின் மீண்டும் தாவர இனங்களுடன் இணைந்து தாவர இனச் செடியாக மாறினாலும்
1.நீரை உணவாக உட்கொள்ளும் நிலை இருப்பினும்
2.அதே சமயத்தில் இரத்தத்தை உறிஞ்சி உணர்வின் அணுக்களை வளர்த்துக் கொள்ளும் நிலைகள் பெறுகின்றது.
 
இப்படிப் பல மாற்றங்கள் ஏற்படுகின்றது இது எவ்வாறு நடக்கிறது…? என்ற நிலையைக் காட்டுகின்றார் குருநாதர். இதையெல்லாம் அறிவதற்கு நான் சாதாரண உணவை உட்கொள்ளவே முடியாது.
 
சில பச்சிலைகளைக் கொடுத்து வாயிலே ஒதுக்கிக் கொள்ளும்படி சொல்வார். அதை மென்று கொண்டே இந்த உணர்வினைச் சுவாசிக்கும்படி செய்வார்.
 
நடந்து செல்லும் போது சில இடங்களில் ரொம்பக் களைப்பானால் நீரைக் குடிக்கும்படி சொல்வார், நீரைக் குடித்த பின் வயிறு உப்பிக் கொள்ளும்
 
சில இடங்களில் செடிகளின் இலைகளைத் தண்ணீரில் கசக்கிப் பிழிந்து விட்டால் நொங்கு போன்று ஆகிவிடும். அதை எடுத்து உணவாக உட்கொள்ளும்படி சொல்வார்.
 
இப்படி எல்லாம் பல தாவர இனங்களின் இயக்கங்கள் எவ்வாறு இருக்கின்றது…? என்பதைக் காட்டுவார்.
 
உயிரணு பெற்று அந்த உடலின் நிலைகளைச் சூரியனின் காந்த சக்தி அதைக் கவர்ந்து கொண்டால் ஒன்றுடன் ஒன்று மோதி அது மீண்டும் தாவர இனத்துடன் கலக்கப்படும் பொழுது எந்த உயிரினத்தில் இருந்து இந்தச் செடியுடன் கலந்ததோ அத்தகைய உயிரினங்கள் வரப்படும் பொழுது இந்த இலைகள் அதனுடன் ஒட்டப்பட்டு இரத்தத்தைக் குடிக்கின்றது. இப்படிப் பல விதமான தாவர இனங்கள் உருபெறுகின்றது.
 
வேறு சில இடங்களுக்குச் சென்றால் அங்கே மனிதனையே பலியிட்டு உணர்வுகளைப் பிரித்து விட்டு அவருடைய உயிரை வெளியே எடுத்து இருப்பார்கள்.
1.அந்த உடலில் இருந்து வெளிப்பட்ட உணர்வலைகள் தாவர இனத்தின் மணத்தை கண்டபின் ராட்சசத் தன்மை கொண்டு ஆவிகள் வேகமாக ஓடுகின்றது.
2.இன்றும் சில இடங்களில் இந்தச் சுழிக்காற்றுகளைப் பார்க்கலாம்.
3.சில குறித்த நேரங்கள் வரும்பொழுது உயிர் பலி இடப்பட்ட இந்த உணர்வுகள் அதைக் கண்ட பின்
4.மற்ற தாவர இனங்களில் சுழிக் காற்றாக அடித்து ரொம்ப வேகமாகத் தள்ளிக் கொண்டு இருக்கும்.
 
அதற்குள் யாராவது மனிதன் சிக்கினால் உயிருக்குள் பட்டபின் காக்காய் வலிப்பு போன்று வந்துவிடும். கர்ப்பிணி யாராவது நுகர்ந்து விட்டால் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்குப் பாதிப்பாகி அதனுடைய உறுப்புகளைச் சீராக உருவாகாதபடி செயலிழக்கச் செய்துவிடும்.
 
இது எல்லாம் காட்டிற்குள் சென்ற பின்
1.இயற்கையின் நிலைகள் எவ்வாறு இயங்குகின்றது…?
2.அக்கால மக்கள் எப்படி வாழ்ந்தனர்…?
3.கடும் பூதங்களாகவும் ராட்சசர்களாகவும் எப்படி உருவானார்கள்…? என்று காட்டுகின்றார்.
 
இன்றும் சில பகுதிகளில் மனிதன் பக்தி கொண்டு மந்திர ஒலிகளைக் கேட்டுப் பதிவாக்கிக் கொண்ட பின் அவன் மடிந்தால் அந்த உயிரணுக்கள் எதனின் எல்லை கொண்டு இருப்பானோ அதன் பகுதிகளிலே அது சுழன்று கொண்டிருப்பதும் அந்த அலைகள் குவிவதும் அங்கே செல்வோர் அஞ்சினால் அந்த உணர்வை நுகர்ந்து அந்த உருவங்கள் தெரிவதும் அப்படிப் பல நிலைகள் உருவாகின்றது.
 
சில மலைப் பகுதிகளுக்குச் செல்லப்படும் பொழுது ராட்சச உருவம் கொண்டு மற்றவர்களைக் கொன்ற நிலையில்… அங்கே மற்றவர் படுத்திருக்கும் பொழுது அந்த உணர்வலைகள் அங்கே குவிகின்றது.
 
குவிந்தபின்
1.படுத்திருக்கும் உடலை எப்படிச் செயலற்றதாக அமுக்குகின்றது…?
2.அமுக்கிய பின் இரத்தத்தை எப்படி உறிஞ்சுகின்றது…?
3.அந்த உடலை விட்டு உயிர் பிரிந்த பின் அதன் நிலை கொண்டு அதுவும் காற்றலைகளுடன் கலந்து எவ்வாறு செயல்படுகிறது…? என்பதையும் குருநாதர் காட்டுகின்றார்.
 
தீமைகள் வளர்ந்து வளர்ந்து மனிதனின் நிலைகளில் அக்காலங்களில் இருந்து இக்காலங்கள் வரையிலும் இதைப் போன்று தான் நடந்து வருகின்றது.
 
இந்த உடலில் எடுத்துக் கொண்ட நிலைகள் கொண்டு சாகாக்கலையாக இந்தப் புவியில் தான் மீண்டும் மாறி மாறி உடல்கள் பெறுவதும் நரகலோகத்தைச் சந்தித்து மீண்டும் சொர்க்கலோகம் வருவதற்குப் பல காலமாகின்றது.
 
இதிலிருந்து மீள்வதற்கு அக்காலங்களில் முதல் மனிதனானவன் தாவர இன்ங்களைப் பயன்படுத்தியவர்களைப் பற்றி மகாபாரதத்திலோ இராமாயணத்திலோ புலஸ்தியர்கள் என்று சொல்வார்கள்.
 
புலஸ்தியர் என்றால் காட்டுவாசிகள்…! அன்று அடர்த்தியான காடுகளில் அவர்கள் இருந்தாலும் அதன் உணர்வின் தன்மை கொண்டு இந்த இடத்தில் வாழ்ந்த அவர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள்…? என்ற நிலையும் காலங்கள் எவ்வாறு சென்றது…? என்பதையும் உண்மையின் உணர்வைச் சொல்லி வருகின்றனர்.
 
எவ்வழியில் எதனை நாம் செயல்படுத்த வேண்டும்…? என்ற நிலைகளில் பின் தெளிவாக அவர்கள் கூறிய நிலையில் எழுத்து வடிவுக்கு வரும் பொழுது இதனைக் கூறியுள்ளார்கள்.
 
ஆனால் எழுத்து வடிவிற்கு வரப்படும் பொழுது அரசன் அந்த எழுத்தின் அறிவைக் கொண்டு வரப்படும் பொழுது ஞானிகள் காட்டிய பேருண்மையின் தன்மைகள் காலத்தால் மறைந்தும் போய் விட்டது.
 
இப்படித்தான் மறைந்து மறைந்து
1.விஞ்ஞான அறிவுகள் வளர்ந்த பின் விஞ்ஞான வளர்ச்சி முதிர்ந்து
2.இன்று மனிதனையே சீர்குலைக்கும் உணர்வாக விளைய வைக்கும் இந்தக் காலத்தில்
3.விஞ்ஞான உலகில் அஞ்ஞான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு உள்ளோம்.
4.இருந்தாலும் இனி நாம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை குருநாதர் அழைத்துச் சென்று உணர்த்துகின்றார்.
 
அஸ்ஸாம் பகுதிகளுக்கு அழைத்துச் செல்கின்றார். அங்கே காட்டு விலங்குகள் அதிகமாக இருக்கின்றது. அந்த மலைப்பாங்குகளில் எவ்வாறெல்லாம் தாவரங்கள் எப்படியெல்லாம் மாற்றம் அடைந்துள்ளது என்பதனைக் காட்டுகின்றார்.
 
குருநாதர் ஒரு பச்சிலையை எடுத்து நசுக்கி என்னிடம் கொடுத்தார் இதை வைத்துக் கொள்…! என்று.
 
அது எதற்கு…? என்று எனக்குத் தெரியாது ஆனால் அதை வைத்துக் கொண்டு நடந்து செல்லும் பொழுது ஒரு யானைக் கூட்டமே அங்கே வருகின்றது.
 
கூட்டமாக வரக்கூடிய யானைகள் இந்த பச்சிலையின் வாசனையைக் கண்டபின் அது பிளிறுகின்றது அஞ்சுகின்றது கத்துகின்றது அருகிலேயே வராதபடி ஓடுகின்றது.
 
ஒரு காண்டாமிருகம் வருகின்றது. அது யானையைக் கூட ஒரு தட்டுத் தட்டி எறியக்கூடிய வலு பெற்றது. அது நடந்து வரப்படும் பொழுது
1.சந்தர்ப்பத்திலே ஒரு செடியிலே உராய்ந்து விடுகின்றது.
2.பட்டபின் இரத்தத்தை அந்தச் செடி உறிஞ்சி விடுகின்றது அப்படியே கீழே விழுகின்றது.
 
முதலிலே ஒரு சில இதை நுகர்ந்து விடுகின்றதுஅதனால் அந்தப் பக்கம் வருவதில்லை. ஆனால் காண்டாமிருகங்கள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுத் தாக்குதல் ஏற்பட்டுத் தப்பி ஓடும் வேகத்தில் வரும் போது இந்தச் செடிகளிலே உராய்ந்த பின் இரத்தத்தை உறிஞ்சிய பின் கீழே விழுந்து விடுகின்றது. இதைக் குருநாதர் காட்டுகின்றார். காடுகளில் இத்தகைய செடி கொடிகள் சில இடங்களில் உண்டு.
 
கேன்சர் நோய் என்றால் மருத்துவத்திற்கு இன்று ஏதேதோ செய்கின்றோம்.
1.ஆனால் இத்தகைய செடிகளின் சத்தை உடலின் மேலே முலாமாக அரைத்துப் பூசினால்
2.கேன்சர் எந்தப் பாகமோ அதற்குள் ஊடுருவி அந்த நோயை அழித்து விடுகின்றது அதோடு அந்தக் கேன்சர் நோய் தீர்ந்து விடுகின்றது.
 
டிபி போன்ற நோய்களுக்கும் இந்தத் தாவர இனங்களை மேலே முலாமாகப் பூசினால் சுவாசிக்கும் பொழுது அந்த டிபி அணுக்கள் மடிந்து விடுகின்றது நோயும் நீங்கி விடுகின்றது.
 
எப்படி எல்லாம் இது செயல்படுகிறது…? என்பதனை அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் தங்களைக் காத்துக் கொள்ளச் செயல்பட்டதையும் இன்று விஞ்ஞான அறிவால் எப்படிச் செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்…? என்பதனையும் குருநாதர் காட்டுகின்றார்.
 
தன் உணவுக்காக வேண்டிக் கனிகளையும் மற்ற மிருகங்களையும் மற்ற உயிரினங்கள் கொன்று உணவாகப் புசித்தாலும் அத்தகைய மிருகங்களிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள அகஸ்தியன் என்று சொல்லும் அவருடைய தாய் தந்தையர்கள் இத்தகைய பச்சிலைகளின் இரகசியங்களை அறிந்து கொண்டார்கள்.
1.ஒருவர் அறிந்ததை மற்றவருக்குச் சொல்வதில்லை.
2.அதன் செயலாக்கங்களை அவரவர்கள் மட்டும் வலுவாக வைத்துக் கொள்கின்றார்கள்.
 
இன்றும் ஒரு சிலர் பச்சிலைகளுடைய இரகசியங்களைத் தெரிந்து கொண்டால் வசதி உள்ளவராக இருப்பார். சில நோய்களுக்காக வேண்டி இதை ஒரு சாமியார் கொடுத்தார். நான் தான் அதைப் பயன்படுத்துவேன் என்று சொல்வார்கள்.
 
ஆஸ்மா நோயைப் போக்குவதற்காக வேண்டி யாரோ ஒருவர் ஆந்திராவில் சொன்னதை
1.ஒரு மீனை எடுத்து அதற்குள் மருந்தைப் போட்டு முழுதாக விழுங்கப்படும் பொழுது
2.அந்த உயிரணுவின் செல்கள் ஊடுருவி ஆஸ்மா நோய் உருவாக்கும் அணுக்களை அது விழுங்கி விடுகின்றது என்ற இரகசியத்தைச் சொன்னார்கள்.
 
இது குடும்பப் பாரம்பரியத்தில் உண்டு. முழுதாக அந்த மீனை விழுங்கிய பின் உடலுக்குள் சென்று ஜீவ அணுக்களாக மீண்டும் அணுக் கருக்களாக மாற்றுகின்றது.
1.அந்த ஆஸ்மாவை உருவாக்கும் சளி எங்கே இருக்கின்றதோ அதற்குள் அணுக்களாக வெடித்து
2.சளியை உருவாக்கும் அணுக்களை விழுங்கி விடுகின்றது…. ஆஸ்மா நோய் நீங்கி விடுகின்றது.
 
இப்படி எல்லாம் சில முறைகள் எவ்வாறெல்லாம் அது இயங்குகிறது…? என்பதையும் நமது குருநாதர் தெளிவாகக் காட்டுகின்றார்.
 
இதைப் போன்று அன்றைய காலங்களில் காடுகளில் வாழ்ந்தவர்கள் விலங்குகளையும் மற்ற உயிரினங்களையும் வேட்டையாடி வந்த நிலையில் அகஸ்தியனுடைய தாய் தந்தையர்கள் காட்டு விலங்குகளிடமிருந்து தப்பித்து வாழ்ந்தார்கள்.
 
பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த முதல் மனிதன் அகஸ்தியனை… தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி இன்று எத்தனையோ நிலைகள் கொண்டு அவனைத் தான் நாம் போற்றுகின்றோம்.
 
அவனுடைய தாய் தந்தையர்கள் தான் பற்பல விதமான மூலிகைகளைப் பச்சிலைகளைத் தாங்கள் படுத்துறங்கும் குகைக்கு முன் போட்டுக் கொள்வதும் தங்கள் உடலிலே முலாமாக அரைத்துப் பூசிக் கொள்வதும் போன்ற நிலைகளில் இருந்தார்கள்.
 
காரணம் இந்த மணத்தை விஷ ஜந்துக்களோ மிருகங்களோ நுகர்ந்தால் அவைகளுக்கு ஒரு மயக்கம் போன்று வரும்அதனால் இவர்கள் அருகிலே அவைகள் வருவதில்லை. தங்களைக் காத்துக் கொள்வதற்காக அவ்வாறு செயல்படுத்தினார்கள்.
 
இந்த மணம் அவர்களுடைய சுவாசத்தில் கலந்து இரத்தத்திலும் கலக்கின்றது. கர்ப்பம் ஆகும்போது கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கும் இது இணைகின்றது.
 
அகஸ்தியனுடைய தாய் தந்தையர் அந்தப் பச்சிலைகளின் மணங்களை நுகர நுகர இது எல்லாம் சந்தர்ப்பம் தான்.
1.கருவில் இருக்கக்கூடிய அகஸ்தியனுக்கு இந்த உணர்வுகள் கிடைக்கப் பெறுகின்றது.
2.நஞ்சை வென்றிடும் அணுக்களாக அவனுக்குள் உருப்பெறுகின்றது.
3.அதன் வழிப்படி அவன் உடலும் உருப்பெறுகின்றது
4.கருவிலேயே அத்தகைய ஆற்றல் பெற்றுப் பிறக்கின்றான்.
5.பிறந்த பின் இவன் அருகிலே விஷ ஜெந்துக்களோ மிருகங்களோ யானையோ மற்ற கொடூர மிருகங்களோ வருவதில்லை.
6.அவன் தான்… தன்னுடைய வளர்ச்சியில் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாகின்றான்.
 
இதை எல்லாம் திரும்பத் திரும்பச் சொல்கிறேன் என்று எண்ண வேண்டாம். அதில் சில விளக்க உரைகளைக் கூட்டி இணைத்துத் தான் ஒவ்வொரு தடவையும் கொடுப்பது…”
 
ஒவ்வொருவரும் தெளிந்த மனம் கொண்டு இந்த மனித வாழ்க்கையில் எவ்வாறு வாழ வேண்டும்…? என்ற உணர்வினை உங்களுக்குள் பதிவாக்கி விட்டால்
1.அந்த அருள் ஞானி ஒளியின் சிகரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் அரும்பெரும் சக்திகளை
2.நீங்கள் பெற இது உதவும் என்பதற்கே மீண்டும் பல கோணங்களில் வெளிப்படுத்துகின்றேன்.
3.தை நுகரச் செய்து பதிவாக்கி மீண்டும் அதை நினைவாக்கப்படும் போது கடும் விஷத்தன்மையிலிருந்து உங்களை மீட்டுக் கொள்ள உங்கள் எண்ணம் உதவும்.
 
ஆகவே
1.எதனின் எண்ணத்தைப் பதிவு செய்கின்றீர்களோ
2.கண்ணின் நினைவு கொண்டு விண்ணை நோக்கி ஏங்கி நுகரும் போது அது வளர்ச்சி வரும் சக்தியாக அடைகின்றது.
3.அந்த வழியிலே நீங்கள் வளர வேண்டும்.
4.விஞ்ஞானப் பேரழிவிலிருந்து காக்கும் சக்தியாக வளர வேண்டும்
5.எப்பொழுது இந்த உடலை விட்டு அகந்றாலும் பிறவி இல்லா நிலை அடைதல் வேண்டும்.
 
தீமை என்ற நிலையில் சிக்கி இன்னொரு உடலுக்குள் புகுந்து பிறப்பின் தன்மை அடையும் நிலையிலிருந்து விடுபட்டு இன்று நல்ல நினைவிருக்கும் பொழுதே அருள் ஒளியின் உணர்வை நமக்குள் சேர்த்துத் துருவ நட்சத்திரமாக இருக்கும் அதன் ஈர்ப்பு வட்டத்தில் சென்று பிறவி இல்லாப் பெரு நிலை அடைவதே நல்லது.