ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 25, 2017

மருந்தே இல்லாத நோய்களையும் கூட நீக்கக்கூடிய மிக மிக எளிதான பயிற்சி ...!

மகரிஷியின் அருள் சக்தியால் எங்கள் உடல் நலம் பெற அருள்வாய் ஈஸ்வரா. மகரிஷியின் அருள் சக்தியால் ஆஸ்த்மா நோய் நீங்கி உடல் நலம் பெற வேண்டும் ஈஸ்வரா… என்று சொல்லி ஒரு ஐம்பது தரமாவது எண்ணிச் சுவாசியுங்கள்.

இதே போல் கேன்சரோ மற்ற எந்த நோயாக இருந்தாலும் சரி… மகரிஷியின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து உடலில் கேன்சர் நோய் நீங்கிட அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணுங்கள்.

மகரிஷியின் அருள் சக்தியால் உடல் நலம் பெற வேண்டும் என்று  முந்நூறு தரமாவது முதலில் சொன்ன மாதிரிச் சுவாசித்து அந்த உணர்வுகளை உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள்.
1.இந்த நோய் தன்னாலேயே போய்விடும்.
2.நீங்கள் எந்த மருந்தைச் சாப்பிட்டாலும் சரி இந்த மாதிரிச் செய்யுங்கள்.
3.மருந்து சாப்பிடுவதற்கு முன்பும் இதே மாதிரிச் செய்யுங்கள்.

ஏனென்றால் இன்றைய வேகமான விஞ்ஞான உலகில் மருந்து சாப்பிட்டுப் பழக்கமாகிப் போய்விட்டது. அதைச் சாப்பிடும் போது மகரிஷிகளின் உணர்வை எண்ணிக் கொண்டு நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்தச் கேன்சருக்கெல்லாம் இன்று மருந்தே இல்லை என்று கூடச் சொல்லலாம். இந்தத் தியானத்தின் மூலம் அதை நீக்க முடியும்.

மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று ஒரு ஆயிரம் தரமாவது நீங்கள் எண்ணி அதைச் சுவாசித்தீர்கள் என்றால்
1.உங்கள் எண்ணம் உங்கள் உடலுக்குள் ஊடுருவி
2.அந்த மகரிஷியின் அருள் சக்தி உங்கள் உடலுக்குள் வலுப் பெற்று
3.அந்தக் கேன்சரையே கேன்சல் செய்துவிடும்
4.அத்தகைய சக்தி உங்கள் எண்ணத்திற்கு உண்டு.

நீங்கள் எண்ணும் எண்ணங்கள் உங்கள் உடலுக்குள் சென்று அந்தக் கேன்சரை நீக்கி விடும்.

இதைப் பழக்கப்படுத்தினால் உங்கள் எண்ணங்களுக்கு மிக மிக வலிமையான ஆற்றல்கள் கூடும். அத்தகைய நிலை பெறச் செய்வதற்கே இந்தத் தியானப் பயிற்சி.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி இதைக் கடைப்பிடிக்க நோய் நீக்கும் சக்தி உங்களுக்குக் கிடைக்கும்.

இதைப் போல நீங்கள் தியானித்து உங்கள் நோய்களைப் போக்கி அதனால் மகிழ்ந்திடும் நிலை வரும் போதுதான் என் குருவை உங்களில் நான் காண்கிறேன்.

சாதாரணமாகச் சொல்கின்றேன்…! என்று எண்ண வேண்டாம். உங்களுக்குள் அந்தச் சக்தி பெருகவே எமது குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களுக்கு இதை வாக்கின் மூலம் பதிவாக்குகின்றேன்.

ஒவ்வொரு மனிதனும் தன் மூச்சால் பேச்சால் பார்வையால் பிறருடைய தீமைகளையும் போக்க முடியும்.

நண்பனுக்கு ஒரு நோய் வந்தாலும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று சுவாசித்து விட்டு
1.உன் நோய் நீங்கி விடும்
2.நலமாக இருப்பாய் என்று சொல்லுங்கள்.
3.இந்த வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

அவர் நோயால் அவதிப்படுகிறார் என்பதைக் கேட்டுணர்ந்தாலும் சோர்வடையாது மீண்டும் நூறு தரம்
1.மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
3.எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் என்று எண்ணிச் சுவாசியுங்கள்
4.மகரிஷியின் அருள் சக்தி அவர் உடல் முழுவதும் படர வேண்டும்.
5.அவர் உடலிலுள்ள நோய்கள் நீங்க வேண்டும்.
6.அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ண வேண்டும்.

நீங்கள் இந்த உணர்வை எண்ணினால் கீதையிலே சொன்னது போல் நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்.
1.மற்றவர்கள் நலமாக வாழ வேண்டும் என்று நாம் எண்ணும்பொழுது
2.நலமடையும் சக்தியை நாம் முதலில் பெறுகின்றோம்.

தீமைகளை அகற்றும் ஞானியின் உணர்வை நமக்குள் வளர்க்கப்படும்போது தீமையை அகற்றிடும் சக்திகள் நமக்குள் விளைகின்றது.

அந்தத் தீமையை அகற்றும் ஆற்றல்களை நாம் பெற்றால் தான் இந்த உடலை விட்டு நாம் அகன்றால் பிறிதொரு உடலின் ஈர்ப்புக்குச் செல்லாதபடி மகரிஷியின் அருள் வட்டத்திற்குள் செல்ல முடியும்.

அங்கே சென்று உடல் பெறும் நிலையைக் கருக்கிவிட்டு உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நிச்சயம் பெற முடியும்.

ஏதோ… எளிதில் சொல்கின்றேன். எளிதில் கிடைக்கச் செய்கிறேன் என்று அலட்சியப்படுத்தி விடாதீர்கள்.

நீங்கள் பெற வேண்டும் என்று நான் சதா தியானிக்கின்றேன். எனது குரு அருள் உங்களுக்குக் கிடைக்கவேண்டும் என்று எண்ணுகிறேன்.

குரு அருளால் உங்களை அறியாது சேர்ந்த தீமைகள் தீய வினைகள் நீங்க வேண்டும் என்றும் உங்களை அறியாது சேர்ந்த பாவ வினைகள் சாப வினைகள் அனைத்தும் நீங்க வேண்டும் என்று தியானிக்கின்றேன்.

மகரிஷிகள் அருள் சக்திகளை நீங்கள் பெற்று உங்களை அறியாது சேர்ந்த தீமைகளை நோய்களை நீங்களே நீக்க முடியும் என்ற இந்தத் தன்னம்பிக்கையில் செயல்படுங்கள்.

உணவை உட்கொள்ளும் போதும் உணவில் கை வைத்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ணிவிட்டு பின் உட்கொள்ளுங்கள்.

அந்த அலைகள் அந்த உணவுக்குள் பாயும். சிறிது நேரம் ஆகாரத்தில் கையை வைத்து விட்டு
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
3.எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்று குறைந்த பட்சம் பத்து தரமாவது எண்ணுங்கள்.

நான் உணவாக உட்கொள்ளும் இந்த உணவு அனைத்தும்
1.என் உடலுக்குள் நலம் பெறும் சக்தியாக வளர வேண்டும்.
2.மன பலம் மன வளம் பெறும் சக்தியாக மலர வேண்டும் என்று எண்ணி மகிழ்ச்சியுடன் உணவை உட்கொள்ளுங்கள்.
3.இந்த உணர்வின் உமிழ் நீர் சுரக்க சுரக்க
4.இந்த உணர்வுகள் சத்துள்ளதாகக் கூடி
5.உங்களுக்குள் நல்ல சக்தியாக நலம் பெறச் செய்யும் சக்தியாக வளர இது உதவும். 

இதை நீங்கள் பயிற்சியாகச் செய்து உங்கள் அனுபவத்தில் நல்ல முன்னேற்றங்களைப் பார்க்கலாம்.