ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 23, 2017

நம்மைக் காத்திடும் மெய்ஞானியின் அலைவரிசை (FREQUENCY)

‘”ஓங்காரக்காளி” என்று யாம் சொன்ன ஓசோன் திரையையும் இன்று அணு குண்டினால் சிதறடித்துவிட்டார்கள். இதனால் விஷத்தன்மைகள் பூமியில் வந்து படர்ந்து கொண்டிருக்கின்றது.

விஞ்ஞானக் கருவிகள் கொண்டு விண்ணிலே பல அலைகளைப் பாய்ச்சிக் கொண்டிருக்கிறார்கள்.
1.விண்ணிலே பாய்ச்சினால்
2.இங்கே பாதிக்காது என்பது அவர்களுடைய எண்ணம். 

விண்ணிலேயும் விஷத்துகள்கள் பரப்பப்படும்போது புவியின் ஈர்ப்புக்குள் சுழற்சியில் வரப்படும்போது, அந்த அலைகள் பூமிக்குள் வருகிறது. அப்படி அலைகள் வரப்படும்போதுதான்,
1.விஷத்தின் தன்மையை முறியடிக்ககூடிய சக்தி இருந்தாலும்,
2.மனிதன் விஞ்ஞானத்தினால் செய்யப்பட்ட நிலைகள்
3.ஒன்றை அழித்துவிட்டு “ஒசோன் திரையைக்” கிழித்துவிடுகின்றது.

ஆக விண்ணிலே இருக்கக்கூடிய ஆற்றல்கள் துரித நிலைகளில் நம் பூமிக்குள் வரக்கூடிய நிகழ்ச்சிகள், நடந்து கொண்டிருக்கின்றது. அவ்வாறு வரக்கூடிய நிகழ்ச்சிகளினாலே மனிதனுடைய சிந்தனைகள் குறைந்து கொண்டிருக்கின்றது.

நாமெல்லாம் ஆனந்தமாக இருக்கவேண்டுமென்று எண்ணுகின்றோம். ஆனால் உணர்வுக்குள் வேதனை தாண்டவமாடிக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரி நிலைகளிலிருந்து மீட்டிக்கொள்வதற்கு, நாம் செய்யவேண்டிய ஒரே முறை அந்த மெய்ஞானியரின் அருளை நாம் பெற வேண்டும்.

இன்று எப்படி ஓசோன் திரை கிழிந்து வருகிறதோ அதைப் போன்று  மற்ற விஷத்தின் தன்மையை “கிழித்தெறியும் தன்மை நாம் பெற வேண்டும். 

நாம் சாதாரண மனிதர்கள் என்று எண்ண வேண்டாம். இவையெல்லாம் சாதாரணமானவைதான். நம்மிடமிருப்பது சாதாரண ஆயுதம்தான், பண வசதியுள்ளவர்கள் யாருமில்லை.

நமக்குள் எண்ணத்தின் வலுவின் தன்மைகளை நாம் பெற வேண்டும். நாம் மெய்ஞானியரின் அருள் சக்திகளைப் பெற வேண்டும்.

நம் எண்ணத்தின் வலுகொண்டு தீயசக்திகள் நம்மை அணுகாது நாம் பாதுகாக்கவேண்டும். அந்த உணர்வின் ஆற்றல் மிக்க சக்திகளை நாம் பெற வேண்டும் நமக்குள் பெருக்கவேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும், அலை வரிசையினாலே மனிதனை இயக்க முடியும் என்று விஞ்ஞானிகள் சொல்லுகின்றனர். அதைப்போல
1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள்வழிப்படி,
2.அந்த மெய்ஞானியரின் அருள் ஒளியை நமக்குள் கூட்டி, 
3.இந்த அலைவரிசைகளை நமக்குள் பெருக்கிப் பழகவேண்டும். 
4.அப்படிப் பழகுவதற்குத்தான் இந்த ஆத்ம சுத்தியும், பயிற்சியும் கொடுத்தது.

இனி நாட்டில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் யுத்தங்கள் நடக்கலாம்.

1.நாம் இரவில் படுத்து உறங்கும்பொழுது
2.அந்த மகரிஷிகளை எண்ணி மகரிஷிகளின் அருள்சக்தியை நாங்கள் பெறவேண்டும் என்று இருந்தால்தான்
3.விஞ்ஞானிகள் அலைவரிசை என்ற நிலைகளில் நம்மைத் தாக்கும் நிலைகளிலிருந்து
4.நம்மைப் பாதிக்காத வண்ணம் நாம் தப்பித்துக் கொள்ள முடியும்.