ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 19, 2014

நாம் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள் - 10

சாமி செய்வார், சாமியார் செய்வார் ஜோதிடம் செய்யும் என்ற நம்பிக்கையில்தான் இன்னமும் இருக்கின்றோம். யாகத்தைச் செய்து பாவத்தைப் போக்கிவிடலாம் என்ற நம்பிக்கையில்தான் இன்னமும் இருக்கின்றோம்

நமது உயிர் நெருப்பாக இருக்கின்றது.
துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வை
உயிர் என்ற யாகத்தீயில் போட்டவுடன்
அதனின் உணர்ச்சிகள் நமக்குள் வருகின்றது.

புற யாகத்தில் பல பொருள்களை யாகத்தீயில் போட்டவுடன் புகை வருகின்றது. அதை அடக்குவதற்கு நெய்யை ஊற்றுகின்றோம்.

அதைப் போன்று, வேகமான உணர்வு வந்ததென்றால்,
அந்த நெடியான உணர்வு இயக்கும் பொழுது,
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை இயக்கினால் அந்த நெடியை அடக்கும். அந்த உணர்வின் தன்மை கொண்டு நமக்குள் மகிழ்ச்சியூட்டும்.

புற யாகத்தில் பல சரக்குகளைப் போடுவதால் ஏற்படும் விஷத்தை அடக்குவதற்குத்தான் யாகத்தீயில் நெய்யை ஊற்றுகின்றார்கள்.
அந்த நெய் விடாமல் இருக்கட்டும்,
உங்களால் உட்காரவே முடியாது.

ஆகவே, உங்களை தீமையான உணர்வுகள் இயக்கிவிடக் கூடாது. அந்தத்ச் சந்தர்ப்பத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருளை எடுத்தால் நெடியை அடக்கிவிடும் தன்னிலை அடையலாம்.

இப்படி எந்த நேரத்திலும் நாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்து, சர்வ தீமைகளைலிருந்தும் விடுபட முடியும். எமது அருளாசிகள்.