ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 29, 2014

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உங்களுக்குள் தீமைகளை எப்படி மாற்றியமைக்கின்றது?

யாம் ஏட்டைப் படிக்கவில்லை. குரு அருள் உணர்வை எடுத்து, நினைத்து யாம் அதன் வழியில் நடந்தோம். 

காற்றில் உள்ளதனைத்தையும் நீங்களும் அறியலாம். நல்லதை நீங்கள் சேமிக்கலாம். நல்லதை நீங்கள் பெறுவதற்குத்தான் இதை உபதேசிப்பது.

அதாவது,  தீமை எப்படிச் சேர்கிறது?
தீமையை நீங்கள் எப்படி மாற்றுவது? என்று இந்த உணர்வைச் சேர்க்கும் போது, நீங்கள் நுகர்கின்றீர்கள்.

இந்த உணர்வுகள் இரத்தத்தில் கலக்கிறது. கூடுமான வரையிலும்,  உங்கள் உடலிலுள்ள அணுக்களுக்கு கொஞ்சமாவது போய்ச் சேர வேண்டும். 

தைப் பெறச் செய்வதற்காகத்தான், இவ்வளவு நேரம் பேசுகின்றோம். நேரம் போய்க் கொண்டு இருக்கிறதே என்று நினைக்கக் கூடாது.

இப்பொழுது உபதேசிக்கும் இந்த உணர்வு கொஞ்சம் சேர்ந்தவுடன், மற்ற தீய அணுக்கள் கொஞ்சம் மூச்சுத் திணறும். அந்த மூச்சுத் திணறும் போது, இதை (அருள் உணர்வுகளை) கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து இதைச் சேர்க்க வைத்துவிட வேண்டும்.

ஏனென்றால், யாம் இடைவிடாது உபதேசித்துக் கொண்டே இருக்கிறோம். இடைவிடாது நீங்கள் நுகர்ந்து கொண்டே இருக்கின்றீர்கள். உங்களுக்குள் கலந்து கொண்டே இருக்கும். யாம் கலக்கச் செய்கிறோம்.

எமக்கு, குருநாதர் மணிக்கணக்கில் கொடுத்தார். இரண்டு நாட்கள் கூட பட்டினியாக இருக்க வைத்துவிடுவார். எமக்குச் சாப்பாடு அந்த அருள் சாப்பாட்டைக் கொடுப்பார். என் உடலிலுள்ள நல்ல அணுக்களுக்கு அந்தச் சாப்பாடு கிடைக்கும்.

அதனால்தான் சாமி அதிக நேரம் பேசுகிறார். மூன்று மணி நேரம், ஆறு மணி நேரம் கூட பேசுகிறார் என்று சிலர் எண்ணிவிடுவார்கள். இதை எல்லாம் உங்களிடம் அருள் சக்தியைப் பெறச் செய்வதற்குத்தான் இந்த நிலைகள்.

ஒரு நிமிடத்தில் சொன்னால் என்னவாகும்?

அருளுணர்வுகளை உங்கள் இரத்தத்தில் கலக்கச் செய்து,  கெட்ட அணுக்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கச் செய்ய வேண்டும். 

அருள் உணர்வுகளைப் கொஞ்சம் கொஞ்சமாகப் புகுத்தி வைக்க வேண்டும். ஏனென்றால், அந்த வழி தெரியவேண்டும்.

ஏனென்றால்விஞ்ஞானி காற்றின் அழுத்தத்தைக் கண்டான். தங்கம் மிகக் கடினமானது. அதை ஒன்றில் போட்டு காற்றழுத்தத்தை அதிகமாக்கி, தங்கத்துடன் மோதியவுடன்  தங்கம் தூசியாகப் போய்விடுகிறது.

கரைத்து விடுகிறான். சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறது அல்லவா!  இப்போது மனிதன் விஞ்ஞானத்தால் அதைக் கரைக்கும் சக்தியைக் கொண்டு வருகிறான்.

அதைபோலஅந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்தவுடன்
இதன் அழுத்தம் அதிகமாகி,
வேகமாகச் சுழற்சியாகிறது.
அப்போது, தீமையான உணர்வுகளுடன் ஊடுருவச் செய்கிறோம்.

விஷம் எப்படி ஊடுருவி அதன் நிலையை மாற்றுகிறதோ தே மாதிரி 
விஷத்தை ஒளியாக மாற்றிய உணர்வுகளை
உங்கள் இரத்தத்தில் கலக்கச் செய்கிறோம்.

உடலில் உள்ள அந்த உணர்வின் அணுக்களுக்குள் ஊடுருவி, அதை மாற்றக்கூடிய சக்தி பெறவேண்டும் என்பதற்குத்தான் மணிக்கணக்கில் பேசுவது.

சிலர், சாமி மணிக்கணக்கில் பேசுகிறார் என்று வெளியே சென்று அமர்வார்கள், வாழ்க்கை நிலைகள் கொண்டு அந்த மாதிரி செல்பவர்கள் போய்விடுகிறார்கள். 

இதில் மிஞ்சி வருபவர்கள், நீங்கள்,  அதாவது, எப்படி இருந்தாலும், அந்த  குருவின் அருளைப் பெறவேண்டும் என்ற நிலைகளில் இருப்பவர்கள்தான்,  இங்கே இருப்பார்கள்.

நீங்கள், கொஞ்சம் கொஞ்சம் பேசப்பேச அங்கே அவர்களுக்கும் கிடைக்கும். அவர்களையும் இங்கே அழைத்துவரும். 

நீங்கள் வளர்ச்சி அடைந்தால்தான் உங்கள் மூச்சு இந்த பூமியில் உள்ள தீமைகளை நீக்கும்.

உங்கள் அக்கம் பக்கம் உள்ளவர்களையும், இது திருந்த வைக்கும்.